செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல

நுண்ணறிவு என்பது பல்வேறு உயிரினங்களில் பல்வேறு வகைகளில் இருக்கின்றது. ஆகவே நம்மால் இது தான் நுண்ணறிவு என்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இன்று நாம் செயற்கை அறிவு அல்லது நுண்ணறிவு என்று கருத்தில் கொள்ளும் அனைத்து முறைகளும் அல்லது பெரும்பாலான முறைகள் மனிதனது நுண்ணறிவு சார்ந்தவையாகவே இருக்கின்றன.

ஒரு இயந்திரம் அல்லது பொறிமுறை நுண்ணறிவு கொண்டதா என இலகுவில் பதில் சொல்லக்கூடியதாக இருப்பதற்கும் இது தான் காரணம். நுண்ணறிவு என்பதே ஒரு பொறிமுறை, மிகச் சிக்கலான பொறிமுறை. இதனை நாம் ஒரு போருளுடனோ அல்லது கணித சமன்பாடுகளோடோ ஒப்பிடமுடியாது.

Continue reading “செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல”

செயற்கை நுண்ணறிவு (AI) 01 – அறிமுகம்

எழுதியது : சிறி சரவணா

இயற்க்கை மிகவும் விந்தையானது. ஒரு கல அங்கியாக இந்த பூமியில் தோன்றிய உயிர் இன்று சூரியத் தொகுதியையும் தாண்டி விண்கலங்களை அனுப்பக் கூடிய அறிவாற்றல் கொண்ட மனித இனமாக வளர்ந்துள்ளது. பிரபஞ்சத்தின் 13.8 பில்லியன் வருட வயதோடு ஒப்பிட்டால், ஒரு கல அங்கியில் இருந்து மனிதன் உருவகியவரை பல மில்லியன் வருடங்கள் எடுத்திருப்பினும், மனிதன் என்று உருவாகிய உயிரினம், இன்று நவீன மனிதனாக உருவாகியதற்கு சில பல ஆயிரம் வருடங்களே எடுத்தது. ஆயினும் கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதன் தொழில்நுட்பத்தில் புரிந்த சாதனைகள் சிறிதல்ல. இந்த கடந்த சில நூற்றாண்டுகளே, நாம், மனிதர்கள், இயற்கையின் விந்தை அறிய தொடங்கிய காலமாகும். பிரபஞ்ச காலக்கடிகாரத்தில் இது வெறும் ஒரு புள்ளியே.

Continue reading “செயற்கை நுண்ணறிவு (AI) 01 – அறிமுகம்”

முடிவில்லா இயற்க்கை

சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய்
கனவிலும் நினையா வண்ணம்
இடை வளைத்து ஆடுகிறாய்
கன்னங்கள் குழிவிழ சிரிக்கும்
குழந்தைபோல ஆயிரம் ஆயிரம்
உணர்ச்சிகள், மடை திறந்த வெள்ளம் போல
பாய்ந்து வரும் அருவிகள் – அதன்
கரைகளில் இருக்கும் கற்களில்
மோதுண்ட நீர் வில்லைகள்
முத்துமணி ரத்தினங்களாய் வானத்தில் தெறிக்க
அதனுள்ளே பாய்ந்த ஒளி – தன்
ஆடைகளைக் களைந்துவிட்டு
தண்ணீரில் பாய விளையும் சிறுவனைப் போல
உற்சாகமாக பல வர்ணங்களில்
சிதறித் தெறிக்க -அந்தக் காட்சியின்
இயக்கத்தை முடித்துவிட்ட கையோடு
அந்த முத்துமணி ரத்தினங்கள்
கண்ணாடிக் குமிழிகளாக நிலத்தில்
மோதுண்டு மடிகிறதே – ஆனால்
அடுத்த நீர்க்குமிழியும் வருமே
ஒளியின் தோலுரிக்க… இயற்கையின் இயக்கம்
காதலுண்ட மங்கையின் நாணத்தைப் போல
முடிவற்றுச் செல்லும்!
– சிறி சரவணா

இயற்கையின் காதல்

உனக்காக காத்திருக்கிறேன் என் அன்பே
பற்பல குளிர்காலங்களும்,
எண்ணிலடங்கா கோடைகளும்
நீண்ட நாட்களாக…
எதிர்காலத்தின் விளிம்பிலே…
நாட்களும் கடந்துவிட்டன…
நேரமும் நெருங்கிவிட்டது…
நான் புறப்படும் நேரம் இதோ வந்துவிட்டது…
இரண்டாய் பிரிந்த மனதில்
ஒன்று இங்கேயும் மற்றொண்டு
அங்கேயுமாக அலைகிறதே…
உன் நினைவிலேயே அவை இரண்டும்
சிறையுண்டு கிடக்கிறதே…
உன் கட்டளைக்கு பணிந்தே…
நான் இன்று விடைபெறுகிறேன்
விண்மீன்களின் தூசாக நான் மாறிவிடுவேன்…
அதுதான் விதியென்று
நீ சொல்லிவிட்டாய் என் அன்பே…
என்மேல் கொண்ட காதலுக்கு நன்றி…
அன்பே… முடிவில்லாக் கனவில் இருந்து
என்னை வெளிக்கொண்டு வந்துவிட்டாய்…
இதோ வருகிறேன்.. நேரம் நெருங்கிவிட்டது…
உன்னோடு நேரமில்லா வெளியில்…
இரண்டிலா ஒன்றாய் கலக்க வந்துவிட்டேன்.

– சிறி சரவணா

கருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா?

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

கருந்துளைகளைப் பற்றி நிறைய விடயங்களை பார்த்துவிட்டோம். சில பல கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். கருந்துளைகளை நம்மால் சுற்றிவரமுடியும் என்று பார்த்தோம். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றைப் பார்போம். Continue reading “கருந்துளைகள் 13 – ஒளி வளைந்து செல்லுமா?”

முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 10

டிசம்பர் 24, 1996

விதியென்ற ஒன்றை மனிதன் நம்ப
மதியென்ற ஒன்றை மாதுவும் படைத்தாள்
தறிகெட்டுத் திரியும் மதியைக் கேட்டால்
விதியென்ற ஒன்றை அது விலக்கிக்காட்டும்

“கணேஷ், நான் மது கதைக்கிறன், எங்கடா இருக்கே? என் ரூமுக்கு வாரீயா? குமார்ரண்ணா கொடுத்த ஓலைச்சுவடியில் இருக்கும் அந்தக் குறியீடுகளையும், பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்த்துட்டேன்! இண்டரஸ்டிங் இன்போ இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் வாரீயா?”

கணேஷ், “……”

போனை வைத்துவிட்டு, கணேஷ் வருவதற்குள் குளித்துவிட்டு பிரெஷ் ஆகிவரலாம் என்று முடிவெடுத்தவள், கடகடவென தனது மேசையில் இருந்த கடதாசிகளை அடுக்கி விட்டு, அந்த அங்கோர்வாட் ஓலைச்சுவடியை பத்திரப்படுத்திவிட்டு, குளியலறைக்கு சென்றாள்.

Continue reading “முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 10”

முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 9

பெப்ரவரி 14, 1997

கணேஷ் டோர்ச்சை அடித்துக் கொண்டு முன்னே செல்ல, அவன் பின்னாலே குமாரும் சென்றான். அந்த அறை மிக விசித்திரமாக இருந்தது. அது கற்களால் ஆன பழங்காலத்து அறை போலவே இல்லை. மஞ்சள் நிறத்தில், ஏதோவொரு உலோகத்தால் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஒளிமுதல் என்று சொல்ல எதுவும் இல்லாததால் மிகுந்த இருட்டாக இருந்தது.

கணேஷ் தனது டோர்ச்சை நிதானாமாக எல்லாப் பக்க சுவரிலும் அடித்துப் பார்த்துக் கொண்டிருக்க, குமாரும் தனது டோர்ச்சை ஒன் செய்தான்.

இந்த அறை முழுவதும் சுவர்களில், மார்பிள் பதித்தது போன்ற சிறிய, சிறிய சதுர அமைப்புகள், அந்த அறைக்கான கதவைத் தவிர, எல்லாப் பக்கங்களிலும், மேல் கீழ் என எந்த பக்கமும் பாகுபாடு இன்றி இந்த சிறிய பாத்ரூம் மார்பிள் போன்ற அமைப்புக்கள் இருந்தன.

Continue reading “முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 9”

கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

கருந்துளைகளில் சிறியது தொடக்கம் பெரியது வரை வேறுபடுத்தி அதன் பண்புகளைப் பற்றிப் பார்த்தோம். அதிலும் நுண்ணிய கருந்துளைகள் இன்னமும் கண்டறியப்படாதது. ஆனால் விண்மீனளவு கருந்துளைகளும், மிகப்பாரிய கருந்துளைகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு. இந்த மிகப்பாரிய கருந்துளைகள் ஒரு விண்மீன்பேரடைக்கு ஒன்று என்ற வீதத்தில் காணப்படும். அதாவது பேரடையின் மையப்பகுதியில் இவை காணப்படும். ஆனால் விண்மீனளவு கருந்துளைகள் அப்படியல்ல. Continue reading “கருந்துளைகள் 12 – இயற்கையின் கண்ணாம்பூச்சி”

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4

எழுதியது: சிறி சரவணா

நிகோலாய் கர்டாசிவ் தான் முதன் முதலில் நாகரீகங்களை இப்படி மூன்றாக வகைப்படுத்தியவர். இன்று நாம் பல்வேறு அறிவியல் துறைகளில் முன்னேறிவிட்டோம், உதாரணாமாக, நானோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், குவாண்டம் இயற்பியல் போன்றவற்றில் எமக்கு இருக்கும் அறிவு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி நாம் எப்படி, வளர்ந்த நாகரீகங்களை வகைப்படுத்தலாம் என்பதிலும் செல்வாக்கு செலுத்துகிறது.

நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வான் நியூமான் ஆய்விகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும். இயற்பியலாளர் ரிச்சர்ட் பைன்மான், “இயற்கையின் அடியில் அதிகளவு இடம் இருக்கிறது” என்கிறார். அதாவது, மூலக்கூறு அளவுள்ள ரோபோக்களை உருவாக்குவதை எந்த இயற்பியல் விதிகளும் தடுக்கவில்லை. இப்போதே ஆய்வாளர்கள், சில பல அணுக்களை மட்டுமே கொண்ட கருவிகளை உருவாக்கி இருக்கின்றனர். உதாரணாமாக, வெறும் நூறு அணுக்கள் நீளம் கொண்ட இழையால் ஆன கிட்டாரை உருவாக்கி இருக்கின்றனரே. ஆக, அணுவளவில் நாம் ஆராயவும், உருவாக்கவும் நிறைய இருக்கிறது.

Continue reading “வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 4”

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3

எழுதியது: சிறி சரவணா

இந்தப் பிரபஞ்சம் மிக மிக பெரியது, அதுவும், இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி ஒளியாண்டுகள் தூரத்தில் அளவிடப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அதிகமான நட்சத்திரத்தொகுதிகள், உயிரினம் வாழ தகுதியற்ற கோள்களையே கொண்டுள்ளன. ஆகவே மூன்றாம் வகையை சேர்ந்த நாகரீகமானது, எண்ணிலடங்கா நட்சத்திர, கோள்த் தொகுதிகளை ஆய்வு செய்ய மிகச்சரியான முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி எவ்வாறான முறையைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும், கோள்களையும் ஆராய முடியும்?

நாம் அடிக்கடி அறிவியல் புனைக்கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்த்திருப்போம், ஒரு விண்கப்பல், அதில் ஒரு ஐந்து பேர்கொண்ட குழு, அவர்கள் எதோ ஒரு கோளை நோக்கி பயணிப்பார்கள். ஆனால் இந்த முறை நடைமுறைக்கு ஒத்துவராது. பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் கோள்களையும் ஆராய இப்படி பெரிய பெரிய விண்கலங்களையும் மனிதர்களையும் அனுப்புவதென்பது முடியாத காரியம்.

Continue reading “வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 3”

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2

எழுதியது: சிறி சரவணா

முதலாம் வகையை சேர்ந்த நாகரீகமானது ஒரு கோள் சார்ந்த நாகரீகமாகும். தான் இருக்கும் கோள்களில் இருந்து தனக்கு தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளும். நமது சக்தி உற்பத்தியைப் போல பல மில்லியன் மடங்கு அதிகமாக அவை உற்பத்தி செய்யக்கூடியது.

முதலாம் வகை  நாகரீகத்தால் தனது கோளில் இருக்கும் காலநிலையை கூட மாற்றமுடியும், அவை அந்தளவு அதிகமான சக்தியை பயன்படுத்தக் கூடியளவு வளர்ந்தவை. நினைத்துப் பாருங்கள், ஒரு சூறாவளி உருவாகிறது. உடனே ‘டுஸ்’ என ஒரு ஸ்விட்ச்சை போட்டு, அந்த சூரவளியயே இல்லாமல் ஆகிவிடலாம்! அதேபோல, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு என்பவற்றைக் கூட கட்டுப் படுத்தக்கூடிய அளவு சக்தியை கொண்டிருக்கும். இவ்வளவு ஏன்? நிலப்பரப்புகளைக் கடந்து கடல்களிலும், சமுத்திரங்களிலும் நகரங்களை நிர்மாணிக்கக்கூடிய வல்லமை கொண்டிருக்கும்.

Continue reading “வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 2”

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1

எழுதியது: சிறி சரவணா

டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு 
தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன்.

காலம்சென்ற பிரபல வானியலாளர், கார்ல் சேகன் ஒரு மிக முக்கியமான கேள்வியை முன்வைத்தார்.

“மில்லியன் வருடங்கள் வாழ்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும்? எம்மிடம் இப்பொது ரேடியோ தொலைகாட்டிகள், விண்வெளி ஓடங்கள் என்பன சில தசாப்தங்களாக மட்டுமே உண்டு; எமது தொழில்நுட்ப நாகரீகம் வெறும் சில நூற்றாண்டுகள் மட்டுமே கண்டது. இப்படி இருக்கும் போது, சில பல மில்லியன் வருடங்களாக இருக்கும் தொழில்நுட்ப நாகரீகங்கள் எப்படி இருக்கும்? அவற்றுக்கு நாம், அதாவது இந்த மனித இனம் குரங்குபோல தெரியுமோ?”

இன்றுவரை விடை தெரியாத ஒரு குருட்டு விடயமாக இருப்பது என்னவென்றால், இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமா இருக்கிறோம் என்பதே. பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லாதிருப்பினும், இந்த பாரிய பிரபஞ்சத்தில் நிச்சம் எம்மைப் போலவே வேறு அறிவுள்ள உயிரினங்கள் இருக்கவேண்டும் என்பது பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்து.

Continue reading “வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1”

கருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

நாம் இதுவரை பார்த்த மாதிரிகளில், கருந்துளை ஒன்று விண்மீனின் முடிவில் உருவாகலாம் என்று பார்த்தோம். விண்மீன்களின் முடிவில் தான் ஒரு கருந்துளை உருவாகவேண்டும் என்று ஒரு விதியும் இல்லை, ஆனால் மிகத் திணிவான விண்மீனின் (சூரியனைப் போல 20 மடங்குக்கு மேல்) முடிவானது ஒரு கருந்துளை உருவாகுவதற்கு தேவையான காரணிகளை உருவாகுகிறது. சிலவேளைகளில், மிக மிக அடர்த்தியான பிரபஞ்ச வஸ்துக்கள், தங்களின் ஈர்ப்பு விசையால் நெருங்கி வரும் போது, அவற்றின் மொத்த திணிவினால் உருவாகிய ஈர்ப்புவிசை அந்த வஸ்துக்களால் கட்டுப்படுத்த முடியாவிடில், அவை சுருங்கத்தொடங்கி கருந்துளையாக மாற சந்தர்ப்பமும் உண்டு. Continue reading “கருந்துளைகள் 11 – கருந்துளைகள் பலவகை, அதில் ஒவ்வொன்றும் ஒருவகை”

கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா?

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

சாதாரண வாழ்வில், இங்கு பூமியில், நாம் அனுபவிக்கும் அல்லது பார்க்கும் விடயங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் நடக்கக்கூடிய, அல்லது அனுபவிக்ககூடிய விடயங்களில் ஒரு துளியளவே. நாம் பிறந்ததிலிருந்தே இந்த பூமியில் வாழ்வதால் நமக்கு தெரிந்த அனைத்தும் “போது அறிவு” உட்பட, எல்லாமே நமது மூளையால் பூமியின் இடத்தில் இருந்தே ஒப்பிடப்படும். நமது சந்திரனைப் பொறுத்தவரை, அதன் ஈர்ப்பு விசையானது பூமியைப் போல ஆறில் ஒரு பங்கு மட்டுமே. அதாவது இங்கு ஒரு மீட்டார் துள்ளக்கூடிய ஒருவரால் சந்திரனில் 6 மீட்டர்கள் துள்ளலாம். கற்பனை செய்து பாருங்கள், 6 மீட்டர் உயரத்துக்கு ஒருவர் அசால்ட்டாக தாவினால் எப்படி இருக்கும். ஸ்பைடர்மேனே தோற்றுவிடுவார் போல! நம்மைப் பொறுத்தவரை அது ஒரு அதிசயம் போலத்தான் ஏனென்றால் பூமியில் அப்படி பாய்ந்த ஒருவரும் இல்லை. நமது அறிவு, பூமியை சார்ந்தே இருக்கிறது! Continue reading “கருந்துளைகள் 10 – கருந்துளைகள் கறுப்பா?”

அசல்போலி

எழுதியது – க.காண்டீபன்

உயிருடன் திரிந்த போது, உதவாத உறவென்று
விரட்டி, நோட்டையே புரட்டி
சீ…. போ…நாயே என்றவர்கள்.
செத்துவிடவே சிவலோகம் அனுப்ப,
கலர் கலர் மாலைகளும், அலங்காரங்களும்.
கூடவே!

சொந்தங்கள் என்று சொல்லி
நோட்டிசுகளும் பறந்து வந்தன.
மிகநொந்து போன மருமகள்மார்களோ!
அயன் குழையாத பஞ்சாப்பியுடன்,
மாமியின் தலைமாட்டில்.
பெயர் தெரியாத பேரப்பிள்ளைகளோ!
பாசத்தீயை பந்தமாக பிடித்து,
புலம்பியபடி…..

அன்னியமாகி விட்ட ஆன்மாவோ!
இக் கூத்துக்களைப் பார்த்து
அத்தனையும் அசல்போலி தான் என்றது
முருங்கையிலிருந்த படி…!

ஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை

எழுதியது: சிறி சரவணா

நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
புள்ளிமானாய் உன்னையே வட்டமிட்டு
உனக்குள்  என்னையே புதைத்துக்கொள்வேன்
உன் வாழ்க்கையே என் உயிர் கண்மணியே

அழகான தென்றல் மெல்லிதாக வீச, அது ஒரு அழகிய காலைப் பொழுதாக விரிந்தது. ஆதவனுக்கு அதிகாலையிலேயே நித்திரையில் இருந்து எழும்பிவிட வேண்டும் என்று ஆசைகள் அடுக்கடுக்காக இருந்தாலும், ஏனோ அவனால் ஐந்து முப்பதுக்கு முன் எழுந்திருக்கவே முடிவதில்லை. இரவில் மனத்துடன் நடக்கும் போராட்டங்களும் சபதங்களும், விடியல் காலை குளிரின் அரவணைப்பில் மறந்தே போகும். நாளை எழும்பிவிடலாம்!

காலை வேளையில் மரங்களினூடே நடப்பது அவனுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இயற்கைதான் எவ்வளவு அழகாக தன் இருப்பை இந்த பிரபஞ்சத்தில் நிலைத்துவிட்டது. அன்பின் மிகுதியில் காதலனும் காதலியும் பின்னிப் பினைவதைப்போல என்று அவனுக்குள்ளே நினைத்துக் கொள்வான். இன்னும் நடக்கலாம், காலை வேளையின் பனிபடர்ந்த அந்தப் பொழுதைப் போல ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரங்களில் வேறு எப்போதும் இந்த இங்கிதம் இருந்ததில்லை. பனிபடர்ந்த அந்தப் பொழுதும், அது மனதுக்குள் ஏற்படுத்தும் அனுபவங்களும் இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று ஆதவனின் கருத்து.

Continue reading “ஒரு காதல் ஒரு கவிதை ஒரு கதை”