உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்

இன்று உலகில் இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று e-waste எனப்படும் இலத்திரனியல் குப்பைகள். அண்ணளவாக 70% மான பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களும் பாகங்களும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதுவரை 41.8 மில்லியன் தொன் அளவு இலத்திரனியல் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை ஆக்கிரமித்து உள்ளன. இது நிலப்பரப்பு சம்மந்தமான பிரச்சினை மட்டுமல்ல, இந்த குப்பைகள், முக ஆபத்தான விஷரசாயனங்களை சிறிது சிறிதாக நிலத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறது, இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சூழல் மற்றும் சுகாதாரப்பிரச்சினையை தோற்றுவிக்கக்கூடும்.

இதற்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடிக்கும் விதமாக அமெரிக்க ஆய்வாளர்கள், வினைத்திறனுடன் தொழிற்படும் கணணி சிப்களை வெறும் மரத்தினால் தயாரித்துள்ளனர். அதாவது கணணி சிப்களில் பெரும்பாலான பகுதி, அதன் வடிவத்தையும், அதன் உறுதியையும் பேணும் கட்டமைப்பாகும், இந்தக் கட்டமைப்பையே ஆய்வாளர்கள் மரத்தினைப் பயன்படுத்தி உருவாகியுள்ளனர், மற்றைய தொழிற்ப்பாட்டுப்பகுதி வெறும் சில மைக்ரோமீட்டர்களே!

Continue reading “உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்”

சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்

எழுதியது: சிறி சரவணா

பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, சமுத்திரங்களில் வாழும் மிதவைவாழி (plankton) உயிரினங்களை கடந்த மூன்று வருடங்களாக ஆய்வுசெய்துள்ளனர். அதன் அடிப்படியில் பல முடிவுகளையும், அந்த அங்கிகளின் படங்களையும் Journal Science சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 35000 வகையான பாக்டீரியாக்களையும், 5000 புதிய வைரஸ்களையும், 15000 இற்கும் மேற்பட்ட ஒரு கல அங்கிகளையும் இனம்கண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவை புதிய, இதற்கு முன்பு இனங்காணப்படாத உயிரினங்களாகும்.

Continue reading “சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்”

புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது

புதிய ஆய்வுகளின்படி, மனித பப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus – HPV) தடுப்பு மருந்து, 80% மான கருப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பன்னிரண்டு வயதாவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் க.வா.பு வருவதை 80% வரை தவிர்க்கலாம்.

இந்த புதிய தடுப்புமருந்து – 9-வாலன்ட் (9-Valent), ஒன்பது விதமான HPV விகாரங்களில் இருந்து பாதுகாப்புவழங்குவதுடன், மேலும் 19,000 வகை புற்றுநோய்களையும், குறிப்பாக பிறப்புறுப்புப்பகுதிகளில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியதாக விளங்குகிறது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய HPV தடுப்புமருந்து, முன்னைய தடுப்புமருந்தைக் காட்டிலும் 11% வினைத்திறனாக செயற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Continue reading “புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது”

கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

கடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலானவை புத்தளத்தைச் சார்ந்துள்ள குடாப்பகுதிகளிலும், மேலும் மட்டகக்களப்பு மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களிலும் அதிகளவில் கண்டல் காடுகள் அதிகளவில் காணப்படுகிறது.

2004 இல் இடம்பெற்ற பாரிய சுனாமி பாதிப்பின் போது, இந்த கண்டல்காடுகள் அதிகளவான சேதத்தை தவிர்த்து பல உயிர்களை காக்க உதவியதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளதும் குறிபிடத்தக்கது.

எப்படியிருப்பினும் கடந்த 100 வருடங்களில் சராசரியாக 76% மான கண்டல் காடுகள் இலங்கையில் அழிவடைந்துள்ளது. ஆகவே இலங்கை இந்தக் கண்டல் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading “கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி”

100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்

எழுதியது: சிறி சரவணா

விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது  வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.

Continue reading “100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்”

விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி

எழுதியது: சிறி சரவணா

நாசா வெற்றிகரமாக தனது புதிய விண்கல எஞ்சின் – EM டிரைவ் ஐ பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. அதாவது, EM டிரைவ் எனப்படும், மின்காந்தவிசை உந்துகைச் செலுத்தியில், காற்றில்லா வெற்றிடத்தினுள் வைத்து அது வெற்றிகரமாக இயங்குவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியிலும் வெற்றிடம் இருப்பதால், இந்த EM Drive, இனி வரும் காலங்களில் ராக்கெட் என்ஜின்களுக்கு பதிலாக, விண்கலங்களில் பயன்படுத்தப்படலாம்.

இந்த EM Drive ஐ பயன்படுத்தி, வெறும் 70 நாட்களிலேயே செவ்வாய்க்கு சென்றுவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த EM Drive எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

Continue reading “விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி”

வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்

எழுதியது: சிறி சரவணா

கடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் புரிந்த சாதனைகள், மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து நாம் செய்த சாதனைகளை எல்லாம் விட அதிகமானது. அதில் மிக முக்கியமான சாதனையாக மனிதனின் விண்வெளிப் பயணத்தைக் குறிப்பிடலாம். அதிலும், 400,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் சென்று காலடிவைத்து, அங்கே வடை சுட்ட பாட்டியை தேடியது மனிதனின் சாதனைகளுக்குள் ஒரு சிகரம் என்றே சொல்லவேண்டும்.

1960 களின் பின்னர் விண்வெளிப் பயணம் என்பது சாத்தியமாகிவிட, மனிதனுக்கு சூரியத்தொகுதியை ஆராய ஒரு புதிய வழி கிடைத்தது. அதுவரை, தொலைக்காட்டிகள் மூலம் மட்டுமே மற்றைய கோள்களையும் அதன் துணைக்கோள்களையும் பற்றி அறிந்த மனிதன், இப்போது வான்வெளிப் பொருட்களை நோக்கி விண்கலங்களை செலுத்தக்கூடியளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட, அதை சாதகமாகக்கொண்டு நமது சூரியத்தொகுதியில் உள்ள கோள்களை ஆராய ஒரு புதிய திட்டம் உருவானது.

Continue reading “வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்”