குவாசார் (Quasar – quasi-stellar radio source) எனப்படுவது பிரபஞ்சத்தில் காணப்படும் பாரிய சக்திவாந்த பொருளாகும். குவாசார்கள் பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்டுள்ள விண்மீன் பேரடைகளை விடப் பிரகாசமானவை.
இவற்றுக்கு இப்படியான பாரிய சக்தியை வழங்குவது, அதன் நடுவில் இருக்கும் கருந்துளை உருஞ்சிக்கொண்டிருக்கும் வாயுக்களினதும் தூசுகளினதும் உராய்வுவிசையாகும். இந்த உராய்வு விசையால் உருவாகும் வெப்பம் மற்றும் சக்தி, ஒளி மற்றும் ஏனைய மின்காந்த அலைகளாக வெளிவிடப்படுகின்றன. கருந்துளையில் இருந்துதான் ஒளி தப்பிக்க முடியாது, ஆனால் இங்கு கருந்துளையை சுற்றி உள்ள வாயு மண்டலத்தில் இருந்தே இந்த ஒளி மற்றும் சக்தி வெளிவிடப்படுகிறது. நடுவில் இந்தச் சக்தியை உருவாக்கும் மோட்டார் போல கருந்துளை!
இந்தப்படத்தில் இருப்பது இரட்டை ஜெட் நெபுலா. பார்க்க அதன் இருபுறமும் ஜெட் போல வாயுக்கள் பீச்சப்படுவதால் இதனை இப்படி அழைக்கின்றனர். சிலர் இதனை வானின் வண்ணத்துப்பூச்சி என்றும் அழைக்கின்றனர்.
1947 இல் அமெரிக்க-ஜெர்மன் விண்ணியலாளர் ரடோல்ப் மின்கொவிஸ்கி என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது ஒரு கோள்விண்மீன் மண்டலமாகும். சூரியனைப் போன்ற ஒரு மத்திம அளவுள்ள ஒரு விண்மீனின் இறப்பின் கடைசி அத்தியாயமே இந்த அழகிய இரட்டை ஜெட் நெபுலா.
பொதுவாக விண்மீன் பேரடைகள் எல்லாம் ஒன்றுகொன்று அருகில் ஒரு குழுவாகவே காணப்படும். உதாரணமாக நமது பால்வீதி உள்ளது உட்குழு (Local Group) எனப்படும் ஒரு தொகுதியில், அன்றோமீடா உள்ளடங்கலாக 57 முக்கிய விண்மீன் பேரடைகள் இதில் உண்டு.
இதில் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விடயம் ஒன்று சொல்கிறேன், கோள்களுக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்குமோ அதைப்போலவே விண்மீன் பேரடைகளுக்கும் துணைப் பேரடைகள் உண்டு. நமது பால்வீதியை எடுத்துக்கொண்டால் அதற்கு அண்ணளவாக 30 துணைப் பேரடைகள் உண்டு, இவை பால்வீதியில் இருந்து 1.4 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தினுள் இருப்பவை, இவற்றில் பெரும்பாலானவை நமது பால்வீதியைச் சுற்றிவருகின்றன.
கணணிப் பாவனை தற்போது அதிகரித்துவிட்டது, இரவு பகல் என்று பாராமல் எந்தநேரமும் கணணித் திரையைப் பார்க்கவேண்டிய கட்டாயம் சிலருக்கு வேலை நிமிர்த்தமாக இருக்கலாம், சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால் திரையின் அதிகூடிய வெளிச்சம் நம் கண்களைப் பாதிக்கின்றது என்பதுதான்.
ஆண்டு – 1670, அக்கால வானியலாளர்கள் இரவு வானில் உன்னிப்பாக, பெரும் வியப்புடன் விண்மீன்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். திடீரென வானில் ஒரு புள்ளியில் பிரகாசமான ஒளிப்புள்ளி ஒன்று தோன்றிற்று. உலகின் வேறுபட்ட பகுதிகளில் இருந்து வானின் அப்பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்த அனைத்து வானவியலாளர்களும் இந்தச் சம்பவத்தை எதேர்ச்சையாக கண்டனர். அப்படி வானில் தோன்றிய புதிய விண்மீனை “நோவா” (nova) என்று கருதினர். நோவா என்றால் வானில் புதிதாக தோன்றிய பொருள் என்று அர்த்தம். ஆகவே அதற்கு “Nova Vul” எனப் பெயரிட்டனர்.
முதன்முறையாக ஆய்வுகூடத்தில் மனித மூளையை செயற்கையாக விஞ்ஞானிகள் வளர்த்துள்ளனர். தாயின் வயிற்றினுள் இருக்கும் ஐந்து வார சிசுவிற்கு இருக்கும் அளவு உள்ள இந்த மூளை வெறும் பென்சில் அழிறப்பர் அளவுள்ளது.
ஆனாலும் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டதே தவிர, எந்தவித உணர்வுகளையும் உணரும் ஆற்றலை இந்த “வளர்த்த” மூளை கொண்டில்லை. அதுமட்டுமல்லாது, இதைவிட பெரிதாக மூளையை வளர்ப்பதற்கு, சிக்கலான இரத்தநாளங்கள் தேவைப்படும், அப்படியான இரத்தநாளங்களை உருவாக்கத் துடிக்கும் இதயமொன்றும் வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பீற்றுவிசையை (jets) உருவாக்குவதில் போட்டியில்லா சாம்பியனாக இருப்பது கருந்துளைகள். கருந்துளைகள் உருவாக்கும் பீற்றுவிசையை மற்றைய வான் பொருட்கள் உருவாக்கும் பலவீனமான பீற்றுவிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் பீற்றுவிசைகள் கருந்துளையினது போலலாமல் பூமியில் இருந்து பார்க்கும் அளவிற்கு பிரகாசமாக இருந்ததில்லை. ஆனால் தற்போது புதிதாய் விண்ணியலாளர்களால் கண்டறியப்பட்ட விண்மீன், கருந்துளையின் சாம்பியன் பட்டத்திற்கு சவால் விடுகிறது.
பல்வேறுபட்ட நாடுகளும் அமைப்புக்களும் சூழலை மாசுபடுத்தக்கூடிய கனிம எண்ணெய்களைப் (petroleum) பயன்படுத்தி தங்கள் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி (renewable energy) வளங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டன. இது ஒரு நல்ல மாற்றமாகும். பெரும்பாலான சூழலியல் விஞ்ஞானிகள் மனிதனது செயற்பாடு காரணமாகவே “புவி வெப்பமடைதல்” அதிகரிக்கிறது என்று கூறுவது ஒருபுறம் இருப்பினும், புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் குறைந்தவிலையில் பெரிய நன்மையைச் செய்கிறது என்பதும் ஒரு காரணம்.
உங்களிடம் செல்லப்பிராணி எதாவது இருக்கிறதா? அப்படியிருந்தால் அதன் பெயர் என்ன? (உங்களிடம் அப்படி இல்லாவிடில், ஏதாவது செல்லப்பிராணி இருந்தால் என்ன பெயர் வைத்திருப்பீர்கள் என்று கற்பனை செய்துபாருங்கள்.) இப்போது உங்கள் செல்லப்பிராணி பத்துக் குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். பிறந்த குட்டிகளை என்ன சொல்லி அழைப்பீர்கள்? அடுத்ததாக இந்தப் பத்துக் குட்டிகளும் பெரிதாகி ஒவ்வொன்றும் பத்துப் பத்துக் குட்டிகளைப் பெற்றெடுத்தால் அவற்றை எப்படி அழைப்பீர்கள்?
நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு இந்த ஆபிரிக்க யானைகள். ஆசியாவில் வாழும் யானைகளை விட சற்றுப் பெரிய இந்த யானைகள், பாரிய ஆபிரிக்க கண்டம் போன்ற வடிவில் அமைந்த காதுகளைக் கொண்டு காணப்படும். ஆனால் ஆசிய யானைகள் வட்ட வடிவமான காதுகளைக் கொண்டிருக்கும்.
கடலில் வாழும் பெரியவொரு ஆமை இனம் இந்த பச்சைக் கடல் ஆமை. பொதுவாக அயனமண்டல (tropical) மற்றும் மித-அயனமண்டல (subtropical) கடற்கரை சார்ந்த பகுதிகளில் காணப்படும் இந்த வகையான ஆமைகள் அகலமான, வழுவழுப்பான ஆமை ஓட்டைக் கொண்டிருக்கும்.
இதனது “பச்சை” என்கிற பெயருக்குக் காரணம், அதன் ஆமை ஓட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பச்சை நிறக் கொழுப்புப் பகுதியாகும். இதனது ஓடு பழுப்பு நிறமானது. இந்த பச்சைக் கடல் ஆமையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அட்லாண்டிக் கடலில் வாழும் பச்சை ஆமைகள், மற்றவை கிழக்கு பசுபிக் கடற்பகுதியில் வாழும் பச்சை ஆமைகள். விஞ்ஞானிகள் இவை இரண்டும் ஒரே இனமா அல்லது வேறு வேறு இனமா என்று இன்றும் தலையைப் பிய்த்துக்கொண்டு திரிகின்றனர்.
இந்தப் படத்தில் தெரியும் அழகான குமிழி போன்ற அமைப்பு ஒரு ஒளிரும் விண்மீனின் ஆவியாகும்! விண்மீன்கள் இறந்தபின் ஆவிகளாகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் படத்தில் இருக்கும் குமிழி போன்ற அமைப்பு முன்பு ஒரு காலத்தில் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனாக இருந்தது. தற்போது இது வெறும் ஆவி! இந்த விண்மீன்களின் ஆவிகள், கோள்விண்மீன் படலங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை இறந்த விண்மீன்களின் எச்சங்களில் இருந்து உருவாகின்றன.
என்ன தலைப்பே ஏடாகூடமா இருக்கே அப்படின்னு நீங்க நினைப்பது கேட்கிறது. ஆனால் புதிய ஆய்வு முடிவுகள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனாலும் பயப்படத்தேவையில்லை! அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் அழிந்துவிடாது. என்ன செய்தி என்று பார்க்கலாம்.
விண்ணியல் ஆய்வாளர்கள் அண்ணளவாக 200,000 விண்மீன்பேரடைகளை அகச்சிவப்புக் கதிர்வீச்சு, ஒளி மற்றும் புறவூதாக்கதிர்வீச்சு ஆகிய நிறமாலைகளில் ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல் சற்று ஆச்சரியமானது – அதாவது பிரபஞ்சம் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட சக்தியின் அளவில் பாதியைத்தான் தற்போது வெளியிடுகிறதாம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய சக்தியின் அளவை விட பாதியளவே தற்போது இந்த விண்மீன்பேரடைகள் உருவாக்குகிறது!
புதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது!
ஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படம் – ஒவ்வொரு புள்ளியும் ஒரு விண்மீன்பேரடை!
இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், எதிர்காலத்தில், அதாவது ஆயிரக்கணக்கான பில்லியன் வருடங்களின் பின்னர் இந்தப் பிரபஞ்சத்தில் சக்தியை உருவாக்க எதுவும் (விண்மீன்கள்) இருக்கப்போவதில்லை. பெரும்குளிரில் இந்தப் பிரபஞ்சம் முடிவடையலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
எப்படியோ தற்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அப்படிக் கவலைப்படவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் ‘சுவாகா’ என்று பூமியை தன்னுள்ளே விழுங்க காத்திருக்கும் நம் சூரியனைப் பற்றிக் கவலைப்படலாம்!
ஹவாயில் நடைபெறும் சர்வதேச விண்ணியல் கழகத்தில் கூட்டத்திலேயே இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. ஏழு விண்வெளி ஆய்வு நிலையங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதற்கு GAMA என பெயரிட்டுள்ளனர்.
அதிகளவான விண்மீன்பேரடைகளை ஆய்வு செய்து அவற்றின் சக்தி வெளியீட்டைப் பற்றிப் படிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். இந்த GAMA ஆய்வு, 21 வேறுபட்ட அலைநீளங்களில் விண்மீன்பேரடைகளை ஆய்வுசெய்கிறது.
1990 களில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி வெளியீட்டின் அளவு குறைந்துகொண்டு வருகிறது என்று ஆய்வாளர்கள் அறிவர், ஆனாலும் GAMA ஆய்வுதான் முதன் முதலில் விண்மீன்பேரடைகளின் சக்திவெளியீட்டின் அளவை அளக்கிறது.
விண்மீன்பேரடைகளின் சக்தி வெளியீட்டின் அளவு குறைந்து கொண்டு வருவது, இந்தப் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவது ஆகிய இரண்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கரும்சக்தி எனப்படும் இன்னும் தெளிவாக அறியப்படாத “சக்தி” இந்தப் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்கிறது என்பது மட்டுமே தற்போது எமக்குத் தெரியும்.
இந்தப் பகுதியில் நாம் ஹபிளின் உள்ளகக் கட்டமைப்புக்களையும் அதன் கருவிகளையும் பார்க்கலாம். ஹபிள் ஒரு தொலைநோக்கிதான் ஆனாலும் அது பல்வேறுபட்ட ஒளியியல் கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல்வேறு அலைநீளங்களில் வரும் மின்காந்த கதிர்வீச்சை படம்பிடிக்க உதவுகின்றது.
ஹபிள் தொலைநோக்கி காசக்ரைன் எதிரோளிப்பான் (Cassegrain reflector) எனப்படும் வகையைச்சார்ந்த தொலைநோக்கியாகும். ஒளியானது ஹபிளின் முதன்மை ஆடியில் பட்டுத் தெறிப்படைந்து அடுத்த சிறிய ஆடியில் படும். அந்த இரண்டாவது ஆடி, முதன்மை ஆடியின் மையத்தில் இருக்கும் துவாரத்தின் ஊடாக ஒளியை குவித்து அனுப்பும். அந்தத் துவாரத்தின் பின்னால், அந்த ஒளியை உணரும் அறிவியல் கருவிகள் காணப்படும். கீழுள்ள படத்தைப் பாருங்கள் புரியும்.
ஹபிளின் முதன்மை ஆடி 2.4 மீட்டார் விட்டம் கொண்டது. பூமியில் உள்ள பாரிய தொலைநோக்கிகளுடன் ஒப்பிட்டால் இது ஒரு சிறிய ஆடிதான். பூமியில் 10 மீட்டார் விட்டம் கொண்ட ஆடிகளைக் கொண்ட தொலைநோக்கிகள் எல்லாம் உண்டு! ஆனால் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் மிக முக்கிய பாயிண்ட் – அதன் அமைவிடம், அது நமது வளிமண்டலத்திற்கு மேலே உள்ளது. முதலாவது பாகத்தில் நாம் விண்வெளித் தொலைநோக்கிகளின் அனுகூலங்களைப் பார்த்தோம்.
வளிமண்டலத்திற்கு மேலே இருப்பதால் ஹபிள் தொலைநோக்கியால் துல்லியமான படங்களை பெற முடிகிறது.
பொதுவாக நாம் எல்லோரும், தொலைநோக்கியின் திறமை, அது எவ்வளவு தூரம் ஒரு பொருளை உருப்பெருக்கும் என்பதில் தங்கியிருக்கும் என்று தவறாக எண்ணிக்கொண்டு இருப்போம். ஆனால் உண்மையிலேயே தொலைநோக்கியின் திறன், அது எவ்வளவு ஒளியைப் பெற்றுக்கொள்கிறது என்பதில் இருக்கிறது. நிறைய ஒளி என்றால் தெளிவான படம்! குறைய ஒளி என்றால் தெளிவு குறைந்த படம். ஆகவேதான் பிரதான ஆடியின் அளவு அதிகரிக்க அதன் திறனும் அதிகரிக்கிறது. பெரிய ஆடி அதிகளவான ஒளியை பெற்றுக்கொள்கிறது.
ஹபிள் தொலைநோக்கியில் இருக்கும் அறிவியல் கருவிகள்
அகண்டபுலக் கமேரா 3 (Wide Field Camera 3 – WFC3)
ஹபிள் தொலைநோக்கியில் இருக்கும் மிகவும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய கருவி. இதனால் கட்புலனாகும் ஒளியில் படங்களை எடுக்க முடியும். அது மட்டுமல்லாது ஊதா நிறத்திற்கு அருகில் இருக்கும் புறவூதாக் கதிர்கள் (near-ultraviolet) மற்றும் சிவப்பிற்கு மிக அருகில் இருக்கும் அகச்சிவப்புக் கதிர்கள் (near-infrared) ஆகியவற்றையும் படம்பிடிக்க முடிகிறது.
அகண்டபுலக் கமேரா தயாரிப்பின் போது நன்றி: விக்கிபீடியா
இந்தக் கமெராவைப் பயன்படுத்தி கரும்சக்தி, கரும்பொருள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுகளும், விண்மீன்களின் உருவாக்கம் பற்றிய ஆய்வுகளும், மிக மிகத் தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளையும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
முதன் முதலில் ஹபிள் விண்ணுக்குச் செலுத்தப்பட்ட பொது அதில் அகண்ட புலக் கமேரா/கோள் கமேரா (Wide Field/Planetary Camera – WFPC) தான் பொருத்தப்பட்டிருந்தது. 1993 வரை இந்தக் கமேராவை வைத்தே ஹபிள் படங்களை எடுத்தது. ஆனால் ஆடியில் இருந்த குறைபாட்டால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை. (பகுதி 1 இல் அதைப் பற்றிப் பார்த்துள்ளோம். அதனை வாசிக்க கிளிக் செய்யவும்.)
பின்னர் 1993 இல் அதனை திருத்தும் பணிக்கு சென்ற குழு, அகண்டபுலக் கமேரா/கோள் கமேரா 2 (Wide Field/Planetary Camera 2) என்ற கமெராவைப் பொருத்திவிட்டு வந்தது. ஆனாலும் காலப்போக்கில் இந்த கமெராவின் CCD இல் ஏற்பட்ட குறைபாட்டினால், 2009 இல் WFC3 ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டது. இது முந்தய இரண்டு கமேரக்களை விட மிகுந்த சக்திவாந்த்தாகும்.
பிரபஞ்சத் தோற்ற நிறமாலை வரைவி (Cosmic Origins Spectrograph – COS)
2009 இல் ஹபிள் திருத்தப் பணிக்கு சென்ற குழு பொருத்திவிட்டு வந்த ஒரு புதிய கருவி. இது மின்காந்த அலைகளில் புறவூதாக்கதிர்களின் அலைகளை மட்டுமே ஆய்வுசெய்கிறது.
நிறமாலை வரைவிகள், அரியம் போல தொழிற்பட்டு வரும் கதிர்களை வேறுபட்ட அலைநீளங்களில் பிரித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் எம்மால் குறித்த முதலில் (source) இருந்து வந்த கதிர்களை வைத்துக்கொண்டு, அந்த முதலின் வெப்பநிலை, அதன் இரசாயனக் கட்டமைப்பு மற்றும் அடர்த்தி, அதன் இயக்கம் இப்படி பல்வேறுபட்ட விடயங்களை கண்டறியமுடியும்!
பிரபஞ்சத் தோற்ற நிறமாலை வரைவி
இந்த COS கருவியைப் பொருத்தமுதல் ஹபிள் தொலைநோக்கி பார்த்த புறவூதாக்கதிர்களின் துல்லியத்தன்மையை இது 10 மடங்கு அதிகரித்தது.
நமது பிரபஞ்சம் தோன்றிய காலகட்டத்தை ஆய்வுசெய்யவும். பிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய கட்டமைப்புகளைப் பற்றிய ஆய்வுக்கும் இந்த COS பயன்படும்.
COS ஐ பயன்படுத்தி நாம் அறிந்துகொள்ள விளையும் விடயங்கள் இதோ,
பிரபஞ்சத்தில் இருக்கும் பாரிய கட்டமைப்புகள் என்ன?
பிரபஞ்சத்தில் எப்படி விண்மீன் பேரடைகள் முதன் முதலில் உருவாகியது?
விண்மீன்கள் பிறந்துகொண்டிருக்கும் விண்மீன் பேரடைகளைச் சுற்றி எப்படியான பிரபைகள் (halos) காணப்படுகின்றன?
பாரிய விண்மீன்கள், விண்மீன் பெருவெடிப்புகள் என்பவற்றில் தோன்றும் உயிர் உருவாவதற்கு தேவையான மூலகங்கள் என்ன?
விண்மீன்கள், கோள் தொகுதிகள் எப்படி தோன்றுகின்றன?
ஆய்வுக்கான மேம்பட்ட கமேரா (Advanced Camera for Surveys – ACS)
கட்புலனாகும் ஒளி அலைவீச்சில் தொழிற்படும் இந்த கமேரா, பிரபஞ்சத்தின் ஆரம்பக்கால நிகழ்வுகளை ஆய்வுசெய்ய பயன்படுகிறது. புறவிண்மீன் கோள்களை கண்டறியவும், விண்மீன்பேரடைத் தொகுதிகளின் பரிணாமத்தை ஆய்வு செய்யவும் ஆய்வாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
ஆய்வுக்கான மேம்பட்ட கமேரா
2002 இல் பொருத்தப்பட்ட இந்தக் கருவி, 2007 இல் செயலிழந்தது. மின்சாரக் குறுஞ்சுற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் இந்தக் கருவி பயன்படுத்தமுடியாத நிலைக்குச் சென்றது. ஆனால் 2009 இல் ஹபிள் தொலைநோக்கியை திருத்தச் சென்றகுழு இதனை மீண்டும் திருத்தி அமைத்தது.
இந்தக் கருவி COS போலவே புறவூதாக்கதிர்களில் தொழிற்படுகிறது. மற்றும் இதனால் கட்புலனாகும் ஒளி மற்றும் சிவப்பிற்கு அருகில் இருக்கும் அகச்சிவப்புக்கதிர்களையும் பார்க்க முடியும். COS மிகத் தொலைவில் இருக்கும் சிறிய புள்ளிகளாக தெரியும் விண்மீன்களையும் குவாசார் போன்ற அமைப்புக்களையும் ஆய்வு செய்யும், ஆனால் இந்த STIS பாரிய கட்டமைப்புகளான விண்மீன் பேரடைகளை அவதானிக்கிறது.
சனிக்கோளில் தோன்றும் அரோராவைப் படம் பிடித்த STIS
அதோடு STIS இனால் கருந்துளைகளைக் கண்டறியமுடியும் என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு.
இது 1997 இல் ஹபிள் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டது. அன்றிலிருந்து 2004 வரை தொழிற்பட்ட இது, 2004 இல் மின்சாரத்தடை காரணமாக செயலிழந்தது. மீண்டும் 2009 இல் திருத்தப் பணிக்கு சென்ற குழு இதனையும் சரிசெய்துவிட்டு வந்தது.
அகச்சிவப்புக் கதிர் கமேரா மற்றும் பல்பொருள் நிறமாலை வரைவி (Near Infrared Camera and Multi-Object Spectrometer)
ஹபிள் தொலைநோக்கியின் வெப்ப அளவீட்டுக்கருவி இது. சூரியனிலிருந்து வரும் வெப்பம் அகச்சிவப்புக் கதிர்வீச்சாகத்தான் வருகிறது. இந்தக் கருவியில் இருக்கும் பெரிய அனுகூலம், விண்வெளித் தூசுகளால் மறைக்கப்பட்ட பொருட்களையும் இதனால் பார்க்க முடியும்.
இவை போல இன்னும் பல சிறிய கருவிகள் ஹபிள் தொலைநோக்கியில் இருக்கின்றன. நாம் முக்கிய கருவிகளை மட்டும் இங்கு பார்த்துள்ளோம்.
இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஹபிள் வெறும் சாதாரண தொலைநோக்கி அல்ல! பல்வேறுபட்ட அறிவியல் கருவிகள் அதில் உண்டு, அவை அனைத்தும் இந்தப் பிரபஞ்சத்தின் வேறுபட்ட பகுதிகளை ஆய்வு செய்கின்றன.
ஹபிளுக்கு அடுத்து என்ன?
ஹபிள் தொலைநோக்கி 25 வருடங்களுக்கு மேலாக விண்வெளியில் தொழிற்பட்டு வருகிறது. பல முறை திருத்தப் பணிகள் மேட்கொன்டாலும், ஹபிளிற்கு அடுத்த வழித்தோன்றலை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது – ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி!
2018 இல் விண்வெளிக்கு அனுப்பத் தயாரிக்கப்பட்டு வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, ஹபிள் தொலைநோக்கியைவிட சக்திவாய்ந்தது. இது 6.5 மீட்டார் விட்டம் கொண்ட முதன்மை ஆடியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (ஹபிளின் ஆடி 2.4 மீட்டார் விட்டம் கொண்டது). அதோடு இது பூமியில் இருந்து 1,500,000 கிமீ தொலைவில் இயங்கும்.
மனிதன், ஹபிளின் பிரதான ஆடி, ஜேம்ஸ் வெப்பின் பிரதான ஆடி – அளவு ஒப்பீடு.
ஹபிள் தொலைநோக்கியைப் போல கட்புலனாகும் ஒளி வீச்சில் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இயங்காது, மாறாக இது அகச்சிவப்பு அலைவரிசையில் தொழிற்படும்.
ஹபிள் தொலைநோக்கி எப்படி விண்ணியல் சார்ந்த அறிவியல் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கியதோ, அதேபோல ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அடுத்த சகாப்தத்தை தொடங்கிவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பற்றி நாம் விரிவாக தனியான ஒரு பதிவில் பார்க்கலாம்.
முற்றும்.
உபரித்தகவல்
ஹபிள் தொலைநோக்கி ஒவ்வொரு 97 நிமிடத்திற்கு ஒரு தடவை பூமியைச் சுற்றிவருகிறது. அதாவது அதன் வேகம் அண்ணளவாக செக்கனுக்கு 8 கிமீ.
விண்ணியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமை இந்த ஹபிள் தொலைநோக்கிக்கே சாரும். இதுவரை 10,000 இற்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு ஹபிள் தொலைநோக்கியின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஹபிள் தொலைநோக்கி மூலம் நாம் இந்தப் பிரபஞ்சம் தொழிற்படும் பல்வேறுபட்ட முறைகளை அறிந்துள்ளோம், பல்வேறுபட்ட வியப்புக்கள், ஆச்சர்யங்கள் மற்றும் எதிர்பாரா முடிவுகள் பல இந்த ஹபிள் தொலைநோக்கி மூலம் மொத்த மனித குலத்திற்கும் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஏற்கனவே வெறும் கோட்பாடுகளாக மட்டுமே இருந்த பல்வேறுபட்ட அறிவியல், விண்ணியல் முடிவுகள், இந்த ஹபிள் தொலைநோக்கி மூலம் வாய்ப்புப் பார்க்கப்பட்டுள்ளது. எதிர்கால விண்ணியலுக்கான அடிப்படைத் தளமாக ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி செயற்பட்டுள்ளது என்றும் நாம் கூறலாம்.
என்னடா புதுக்கதையா இருக்கு என்று நீங்கள் சிந்திக்கலாம்! நாம் உண்ணும் உணவு நமக்கு சக்தியை தருகிறது. எல்லா உயிரினங்களும் ஏதோவொரு வகையில் சக்தியைப் பெற்றுக்கொள்கின்றன, பொதுவாக எல்லாமே உணவுதான், இறுதியில் அது சக்திதான். ஆனால் இங்கு நடைபெறுவது கொஞ்சம் விசித்திரமானது.
இந்த வகை பாக்டீரியாக்கள், சக்தியை அதனது அடிப்படை அமைப்பில் இருந்தே பெற்றுக்கொள்கிறது, அதுதான் இலத்திரன்கள் (electrons)! இவை பாறைகளில் இருந்தும் கனிமங்களில் இருந்தும் இலத்திரன்களை பிரித்தெடுத்து உண்கின்றன. ஏற்கனவே இரு வேறுபட்ட பாக்டீரியாக்களைப் பற்றி ஆய்வாளர்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது உயிரியலாளர்கள் பாறைகளுக்கும், சேற்றுக்கும் சிறியளவு மின்சாராத்தை பாச்சுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்களை கவரமுடியும் என கண்டறிந்துள்ளனர்.
விண்ணியல் என்று வந்தாலே வானை அண்ணார்ந்து பார்த்து அதில் இருக்கும் விண்மீன்களை முதலில் வியந்து, பின்னர் அவற்றின் இயக்கத்தைப் பற்றிப் படித்து, விண்மீன் தொகுதிகளை எமது மனதின் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு உருவாக்கி படிப்படியாக இந்தப் பூமியைத் தவிரவும் சுவாரசியமான விடயங்கள் விண்ணில் இருக்கின்றன என்று தெரிந்துகொண்டதன் மூலம் விண்ணியல் என்ற துறை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது என்று சொல்லலாம். தவறில்லை.
அதற்கு அடுத்தகட்டம் என்ன? விண்ணில் இருக்கும் எல்லாமே மிக மிகத் தொலைவில் இருப்பதால் ஆதிகால மனிதனால் விண்மீன்களோ, கோள்களோ அவற்றை புள்ளிகளாக மட்டுமே பார்க்க முடிந்தது. அவற்றைப் பற்றி அவன் அறிந்திருந்ததெல்லாம் அவற்றின் இயக்கங்களைப் பற்றி மட்டுமே.
சென்ற வருடத்தில் மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கியது இந்த ஏபோலா வைரஸ். ஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவத்தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்களும் அரசாங்கங்களும் பெரும் முனைப்புக் காட்டின. பல்வேறு பட்ட ஆய்வாளர்கள் குழு ஏபோலா வைரஸிற்கு தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஆய்வில் இறங்கி. தற்போது வெற்றியும் அடைந்துள்ளனர்.