2008 இல் இருந்து ஆர்டிக் வட்டப்பகுதியில் இருக்கும் Svalbard என்கிற தீவுக்கூட்டத்தில் உலக விதைக்கிடங்கு இருக்கிறது. எதிர்காலத்தில் வரக்கூடிய பேரழிவில் இருந்து உருவாகக்கூடிய உணவுத்தட்டுபாடு மற்றும் பஞ்சம் ஆகியவற்றில் பாதுகாக்க மில்லியன் கணக்கான பயிர்களின் விதைகள் இங்கே பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. Continue reading “வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தை எதிர்நோக்கும் விதைக்கிடங்கு”
பகுப்பு: சூழல்
ஆகஸ்ட் 2016 – ஆர்டிக் வட்டப் பிரதேசத்தினுள் இருக்கும் வடக்கு சைபீரிய பிரதேசத்தில் ஒரு பையன் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறான். சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறான். அவனைப்போலவே தொன்னூருக்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர், அதில் ஐம்பதிற்கும் அதிகமானோர் சிறுவர்கள். இந்தப் பையன் இறக்க காரணமாக இருந்ததும், மேலும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட காரணமாக இருந்ததும் அந்திராக்ஸ் எனப்படும் ஒரு தொற்றுநோய், இதனை Bacillus anthracis எனும் பக்டீரியா தோற்றுவிக்கிறது. திடிரென வடக்கு சைபீரிய பிரதேசத்தில் ஆந்திராக்ஸ் தொற்று உருவாகக் காரணமென்ன? Continue reading “உறைந்திருக்கும் அரக்கர்களை தட்டி எழுப்பும் வெப்பநிலை மாற்றம்”
புவியின் காலநிலை மாற்றத்தினால் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில், நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருப்பது துருவங்களில் இருக்கும் பனியின் அளவு குறைவடைவதே. Continue reading “வேகமாக குறைவடையும் அண்டார்டிக்கா பனியின் அளவு”
The Great Barrier Reef எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் இருக்கும் பவளக்கடல் பிரதேசத்தில் காணப்படுகிறது. அண்ணளவாக 2,900 தனிப்பட்ட பவளப்பாறைகளைக் கொண்ட இந்த திட்டுத்தொகுதி 2,300 கிமீ நீளமானது மட்டுமல்லாது 344,400 சதுர கிமீ அளவில் பரந்து காணப்படும் இயற்கையின் அதிசயங்களில் ஒன்று என்று கூறலாம். Continue reading “அழிந்துவிட்ட பெரும் தடுப்பு பவளத்திட்டு”
வளிமண்டலத்தில் காபனின் அளவு மிகவேகமாக அதிகரித்துவருவதை ஆய்வாளர்கள் வருத்தத்துடன் கண்காணித்துக்கொண்டு வருகின்றனர். அண்ணளவாக 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர், அதாவது டைனோசர்கள் அழிவடைந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் எவ்வளவு காபன் காணப்பட்டதோ, அதே அளவுக்கு தற்போதும் வளிமண்டலத்தின் காபனின் அளவு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இது எதிர்காலத்தில் மிகபெரிய உயிரினப் பேரழிவுக்கு வித்தாகலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. Continue reading “அதிகரிக்கும் வளிமண்டல காபனின் அளவு”
பூமி உருவாகி முதன் முதலில் சமுத்திரங்கள் தோன்றி இருந்த காலப்பகுதியில் சமுத்திரங்கள் மிக அதிகமான வெப்பநிலையில் காணப்பட்டன என்றே இதுவரை கருதப்பட்டது. ஆனால் புதிய ஆய்வு முடிவு வேறுவிதமாகக் கூறுகின்றது. அதாவது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது. Continue reading “3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்”
எழுதியது: சிறி சரவணா
“குளோபல் வார்மிங்” என்ற சொல் எமக்குப் பரிட்சியமானது. அது பற்றிய பொதுவான புரிதல், பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதுதானே. அது தவறு என்ற காரணத்தால்தான், விஞ்ஞானிகள் தற்போது குளோபல் வார்மிங் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் “கிளைமேட் சேஞ்” அல்லது காலநிலை மாற்றம் என்கிற சொற்தொடரைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் பூமியொரு சிக்கலான பொறிமுறையைக் கொண்டு செயற்படும் பாரிய அமைப்பு. அதன் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றத்தை வெறும் “வெப்பநிலை மாற்றம்” என்று கூறிவிடமுடியாது.
இதுவரை பூமியில் ஐந்து உயிரினப் பேரழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலாவது, அண்ணளவாக 540 மில்லியன் வருடங்களுக்கு முன்பு எடியகரன் காலம் (Ediacaran period) முடிவுக்கு வந்த காலமாகும். பல மில்லியன் வருடங்களாக எந்தவொரு அழிவையும் சந்திக்காத முதலாவது பலகல அங்கிகள் பாரிய உயிரினப் பேரழிவை சந்தித்தது.
[பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்]
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள், இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.
Continue reading “உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?”
எழுதியது: சிறி சரவணா
இதுவரை மேற்கு அரைக்கோளத்தில் உருவாகிய ஹரிக்கன்/ சூராவளிகளிலே மிகப்பெரியது கடந்த வெள்ளிக்கிழமை மெக்ஸிகோவின் பசுபிக் கரையோரத்தை தாக்கிய பற்றிசியா என்கிற சூறாவளியாகும்.
வெப்பமண்டல புயலில் இருந்து ஐந்தாம் வகை சூறாவளியாக வெறும் 24 மணிநேரங்களில் மாறியது! சபீர்-சிம்சன் அளவுத்திட்டத்தில் ஐந்தாம் வகை சூறாவளியே மிகப்பெரியது! இதுவரை உருவாகிய சூராவளிகளிலேயே இவளவு வேகமாக எதுவுமே வளர்ச்சியடைந்தது இல்லை.
Continue reading “மேற்கு அரைக்கோளத்தில் வந்த அரக்கன்: ஹரிக்கேன் பற்றிசியா”
எழுதியது: சிறி சரவணா
“பூமி வெப்பமாதல்”, அல்லது “குளோபல் வார்மிங்” என்கிற சொற்பதங்களை நீங்கள் கேள்விப்படிருபீர்கள் அடிக்கடி செய்திகளிலும் இணையத்திலும் அடிபடும் சொல்தான் இது. கேள்விப்படாவிடினும் இந்தக் கட்டுரையின் முடிவில் உங்களுக்கு இந்த “பூமி வெப்பமாதல்” பற்றிய ஒரு சிறிய புரிதல் உருவாகும் என நம்புகிறேன்.
இங்கு நாம் பார்க்கப்போகும் விடயம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதே, அதாவது பூமி வெப்பமாதலினால் ஏற்படும் ஒரு பக்கவிளைவு இந்த கடல் நீர் மட்டம் அதிகரித்தல் என்றாலும் பூமி வெப்பமாதலினால் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் மிகப்பெரிய உபாதை இந்த கடல் மட்டம் அதிகரித்தல் ஆகும். இப்படி கடல் மட்டம் அதிகரிப்பதால் கடல் மட்டத்திற்கு அருகில் இருக்கும் நிலப்பரப்புகள் நீரில் மூழ்கும். அங்கு வாழும் மக்கள் வேறு இடம் செல்லவேண்டும் – பிரச்சினை தொடங்கும்!
Continue reading “பூமி வெப்பமடைதலும் கடல் மட்டம் அதிகரிப்பும் 1”
எழுதியது: சிறி சரவணா
பல்வேறுபட்ட நாடுகளும் அமைப்புக்களும் சூழலை மாசுபடுத்தக்கூடிய கனிம எண்ணெய்களைப் (petroleum) பயன்படுத்தி தங்கள் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி (renewable energy) வளங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டன. இது ஒரு நல்ல மாற்றமாகும். பெரும்பாலான சூழலியல் விஞ்ஞானிகள் மனிதனது செயற்பாடு காரணமாகவே “புவி வெப்பமடைதல்” அதிகரிக்கிறது என்று கூறுவது ஒருபுறம் இருப்பினும், புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் குறைந்தவிலையில் பெரிய நன்மையைச் செய்கிறது என்பதும் ஒரு காரணம்.
கடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலானவை புத்தளத்தைச் சார்ந்துள்ள குடாப்பகுதிகளிலும், மேலும் மட்டகக்களப்பு மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களிலும் அதிகளவில் கண்டல் காடுகள் அதிகளவில் காணப்படுகிறது.
2004 இல் இடம்பெற்ற பாரிய சுனாமி பாதிப்பின் போது, இந்த கண்டல்காடுகள் அதிகளவான சேதத்தை தவிர்த்து பல உயிர்களை காக்க உதவியதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளதும் குறிபிடத்தக்கது.
எப்படியிருப்பினும் கடந்த 100 வருடங்களில் சராசரியாக 76% மான கண்டல் காடுகள் இலங்கையில் அழிவடைந்துள்ளது. ஆகவே இலங்கை இந்தக் கண்டல் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Continue reading “கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி”