வில்லியம் ஹெர்ச்செல் : இசை ஞானியில் இருந்து இயற்பியலார் வரை

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் வில்லியம் ஹெரச்சல். 1738 இல் ஜெர்மனியில் உள்ள ஹனோவர் எனுமிடத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்டு பல்வேறு இசைக்கருவிகளில் தேர்ச்சிபெற்றார். ஆனாலும் அறிவியலிலும் ஆர்வம் இருந்தது.

19 வயதில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்த பின்னரே இவரது அறிவியல் ஆர்வம், குறிப்பாக விண்ணியலில் அதிகரித்தது. இவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லின் உதவியுடன் ஒளித்தெறிப்பு தொலைக்காட்டி ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் இரவு வானின் அற்புதங்களை ஆராயத்தொடங்கினார். மே 1773 இல் இருந்து தனது தங்கை கரோலினுடன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து இரவுவானை தினமும் அவதானிப்பது தொடங்கிற்று.

800px-William_Herschel01

விண்ணில் தெரியும் பல புள்ளிகள் உண்மையில் ஒரு விண்மீன் அல்ல மாறாக அவை இரண்டு விண்மீன்கள் மிக மிக அருகில் இருப்பதால் வெறும் கண்களுக்கு ஒரு போல தெரிகிறது என்று தனது தொலைநோக்கி ஆய்வுகளில் கண்டறிந்தார்.

மார்ச் 13, 1781 இரவில் அவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்து வானை அவதானிக்கும் போது ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. முதலில் அது ஒரு நெபுலா அல்லது வால்வெள்ளி என்றே ஹெரச்சல் கருதினார், ஆனால் நீண்ட அவதானிப்புகளுக்கு பிறகும், வேறு பலரின் அளவீடுகளுக்கு பின்னரும் அது ஒரு பெரிய கோள் என்று முடிவானது. அதுதான் இன்று நாமறியும் யுறேனஸ் கோள்.

தனது வாழ்நாளில் நூற்றிற்கும் மேற்பட்ட இருமைவிண்மீன்கள், ஆயிரக்கணக்கான நெபுலாக்கள் என்பவற்றை அட்டவனைப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாது, கட்புலனாக ஒளியின் அலைநீளத்தில் இருக்கும் அகச்சிவப்பு கதிர்வீச்சைக் கண்டறிந்தவரும் இவரே. இதன் மூலம்சூரியனில் இருந்து பட்புலனாகும் ஒளி மட்டுமல்ல, கண்களுக்கு புலப்படாத வேறுபல கதிர்வீச்சுக்களும் வருகின்றன என்று முதன்முதலில் முடிவெடுத்தவர் இவரே.

எவ்வளவு புகழ் வந்தாலும், இறுதிவரை ஒரு சாதாரண விஞ்ஞானியாகவே, இயற்கயின் அற்புதங்களை கண்டறிய ஆவல் கொண்ட சிறுவனாகவே தன்னை அவர் நினைத்துக்கொண்டார். விஞ்ஞானத்தின் வரலாற்றில் மிகச் மிகச்சிறந்த கதைகள், இயற்கை மீது கொண்ட காதலால் உருவானது என்பதனை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam

மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி

சின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் “கிடைத்திருந்த” அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்!

Continue reading “மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி”

சாதனைகள் பலவிதம்

இந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது… கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள் எல்லாம் இல்லை! அதற்காக மாற்றங்கள் இல்லாமலும் இல்லை, சாதாரணவாழ்வில் நடை பெறும் விடயங்கள் நம்மை பெரிதும் பாதிக்கும் போதுதான், அது நமக்குள் பெரிய மாற்றங்களை விளைவிக்கிறது.

Continue reading “சாதனைகள் பலவிதம்”

தொலைத்து விட்டு தேடுகின்றோம்

நான் வெளியூரில் வேலை செய்த பொழுது சாப்பாட்டிற்கு “ரசம்” என்ற ஒன்றை ஒரு “கறிபேக்கில்” தருவார்கள். அதில் ஒரு கலவை ஒரு புறம் தண்ணி ஒரு புறம் இருக்கும். அதனை ஒரு குலுக்கு குலுக்கினால் ரசம் ஒரு “கலரில்” வரும்.

ரசம்
ரசம்

Continue reading “தொலைத்து விட்டு தேடுகின்றோம்”

தீ மிதிப்பு

தீ மிதிப்பு விழாபாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில் ஆர்வம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் அதில் பங்கு கொண்ட பொழுது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்றாவது வருடம் என்னுடைய நண்பரும் இணைந்து கொண்டார். Continue reading “தீ மிதிப்பு”

சக்திமிக்க வார்த்தைகள்

சாபம்

உண்மையிலேயே சாபம் விடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அப்பா தனது பாடசாலைக்காலத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார்.

அவர் 1960 களில் கல்லடி ராமகிருஸ்னமிசனில் இருந்து, சிவானந்தாவில் படித்தவர். அங்கு ராமகிருஸ்னமிசனில் இருந்த தலைமைச் சாமியார் ஒரு இந்தியர். அந்தக்காலத்திலேயே BA படித்து விமான ஓட்டியாக வேறு இருந்தவர், எதோ காரணத்துக்காக எல்லாவற்றையும் உதறிவிட்டு சாமியாராக வந்துவிட்டார். நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டான மனிதர் என்று அப்பா சொல்லுவார். அப்பா அங்கிருக்கும் காலத்தில் மிசனில் மற்ற மாணவர்களையும் மேற்பார்வயிடுபவராக, சாமி பூசை செய்பவராகவும், இந்த சாமியாரின் உதவியாளராகவும் இருந்துள்ளார். Continue reading “சக்திமிக்க வார்த்தைகள்”

இணையமும் நாமும்

இணைய அடிமைகள்
இணைய அடிமைகள்

முன்னர் அடிக்கடி மட்டக்களப்பு நூலக வாசிகசாலைக்கு செல்வதுண்டு. நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று செல்லக் கிடைத்தது. அதில் பல கட்டுரைகள் இணையத்திற்கு குறிப்பாக பேஸ்புக்கில் அடிமையாக இருக்கின்றமை பற்றியும் நல்ல கட்டுரைகளை வாசிக்கக் கிடைத்தது. Continue reading “இணையமும் நாமும்”