எழுதியது: சிறி சரவணா
நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம் என்ற ஒன்றை வரைவிலக்கணப் படுத்தியுள்ளோம். சரி உயிரினம் என்றால் என்ன என்று உயிரியல் எப்படி வரைவிலக்கணப் படுத்தியுள்ளது என்று பார்க்கலாம்.
எதோ ஒன்று உயிருள்ளது என்று கருத அது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உயிரியல் கூறுகிறது.
- ஒரு ஒழுங்கான கலக்கட்டமைப்பு கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். ஒரு கலமோ அல்லது பல கலங்கலாகவோ இருக்கலாம்.
- தன் நிலையைப் பேன சக்தியைப் பயன்படுத்துதல்
- சுவாசித்தல்
- இனப்பெருக்கப் செய்தல்
- வளர்ச்சியடைதல்
- வளர்சிதைமாற்றத்துக்கு உள்ளாதல்
- தூண்டல்களுக்கான துலங்கல்களைக் காட்டுதல்
- சூழலுக்கு ஏற்ப்ப இசைவாக்கம் அடைதல்
- அசைதல்
- கழிவகற்றல்
இதைபோல இன்னும் சில பண்புகளும் உண்டு, அதாவது கூர்ப்படைதல், தலைமுறைகளை உருவாக்குதல், மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்துதல் இப்படி பல இருந்தாலும், அடிப்படையாக உயிரினம் என்று ஒன்றை வகைப்படுத்த மேலே கூறியுள்ள பண்புகளை அது கொண்டிருக்கவேண்டும். இங்கு பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இந்த வகையான பண்புகளை காட்டுகின்றன.