உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?

இதுவரை பூமியில் ஐந்து உயிரினப் பேரழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலாவது, அண்ணளவாக 540 மில்லியன் வருடங்களுக்கு முன்பு எடியகரன் காலம் (Ediacaran period) முடிவுக்கு வந்த காலமாகும். பல மில்லியன் வருடங்களாக எந்தவொரு அழிவையும் சந்திக்காத முதலாவது பலகல அங்கிகள் பாரிய உயிரினப் பேரழிவை சந்தித்தது.

[பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்]

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள்,  இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.

Continue reading “உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?”