முடிவில்லா இயற்க்கை

சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய்
கனவிலும் நினையா வண்ணம்
இடை வளைத்து ஆடுகிறாய்
கன்னங்கள் குழிவிழ சிரிக்கும்
குழந்தைபோல ஆயிரம் ஆயிரம்
உணர்ச்சிகள், மடை திறந்த வெள்ளம் போல
பாய்ந்து வரும் அருவிகள் – அதன்
கரைகளில் இருக்கும் கற்களில்
மோதுண்ட நீர் வில்லைகள்
முத்துமணி ரத்தினங்களாய் வானத்தில் தெறிக்க
அதனுள்ளே பாய்ந்த ஒளி – தன்
ஆடைகளைக் களைந்துவிட்டு
தண்ணீரில் பாய விளையும் சிறுவனைப் போல
உற்சாகமாக பல வர்ணங்களில்
சிதறித் தெறிக்க -அந்தக் காட்சியின்
இயக்கத்தை முடித்துவிட்ட கையோடு
அந்த முத்துமணி ரத்தினங்கள்
கண்ணாடிக் குமிழிகளாக நிலத்தில்
மோதுண்டு மடிகிறதே – ஆனால்
அடுத்த நீர்க்குமிழியும் வருமே
ஒளியின் தோலுரிக்க… இயற்கையின் இயக்கம்
காதலுண்ட மங்கையின் நாணத்தைப் போல
முடிவற்றுச் செல்லும்!
– சிறி சரவணா

முடிவில்லாப் பயணம் 1 – 8

முன் குறிப்பு: அறிவியல் புனைக்கதை எழுதுவதென்பது எனக்கு  ஒரு புதிய முயற்சி. வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். “முடிவில்லாப் பயணம்” ஒரு அறிவியல், அமானுஷம் கலந்து செல்லும் ஒரு கதை. முதல் 8 பாகங்கள் இந்த பதிவில் உண்டு, மற்றவை அடுத்த பதிவில். – சரவணா


“கல்தோன்றி மண் தோன்றாக காலத்தே
முன் தோன்றிய மூத்த மொழி”

பகுதி 1 

பெப்ரவரி 14, 1997

“நீ ஏண்டா அவளோட ஒரே சண்டை பிடிக்கிறே? கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே” குமார், கணேஷை பார்த்தவரே நின்றுகொண்டிருந்தான்.

“நீயுமாடா? உனக்கு தெரியாதா மதுவை பற்றி, சும்மா அவளை சீண்டிப் பார்க்கிறதுதானே..” என்று வடிவேலு காமடி போல பல்லைக் காட்டி சிரித்தான் கணேஷ்.

“ஒரு நாளைக்கு காண்டாகப் போறா, அன்னைக்கு இருக்குடீ உனக்கு…” என்று சொல்லியவாறே அந்தப் பாறைகளுக்கு இடையில் இருந்த அந்த ஆறு இஞ்சுக்கு ஆறு இன்ச் சதுரவடிவான கல்லை சற்றே உள்ளுக்கு தள்ளினான் குமார். அதுவும் லாவகமாக ஒரு இன்ச் உள்ளே சென்றதும், புஸ் என சிறிய சத்ததுடன் காற்றோடு கலந்த தூசும் அந்த கல் இடுக்கில் இருந்து வெளியே வந்தது!

கணேஷின் கண் விரிய, முகத்தில் ஒரு ஆனந்தப் புன்னகை.. குமாருக்கு சொல்லவே வேண்டாம், “டேய், திறப்புக் கல்லை கண்டுபிடிச்சிடோம்!!” என்றான் குதுகலமாக!!

அதுசரி யாரிந்த குமார், கணேஷ்? அதென்ன கல்? என்ன செய்துகொண்டிருகிரார்கள்? அதை பார்க்க நாம் ஒரு சில மாதங்கள் வரை முன்னோக்கி செல்லவேண்டும். செல்வோமா?

Continue reading “முடிவில்லாப் பயணம் 1 – 8”

ஒன்றிணைக்கும் அன்பில்

தன் வெளியின் ஓடம்
எத்தனை தொன்மையினை
கடந்து வந்திருக்கிறது
கால நினைவில்
இதனையும்
இணைத்து விடு.

நம் தனித்த
விண்ணை
அத்தனை உயிர்ப்புடன்
நோக்குகிறேன்.
அன்பு
ஒரு பொருட்டல்ல
விண் நிறைக்கும் உணர்தல்
ஒவ்வொரு தனிமையிலும்
வீற்றிருக்கிறது.

விண்ணகி
மேலும் காத்திரு
அகாலம்
தன் வினையை
எப்பொழுதும்
உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறது.

ஒன்றிணைக்கும் அன்பில்
மீண்டும்
வந்திணை.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்

காலத்தின் இறுதியொன்று

கால நுழைவாயில்
தன் நினைவை
அதனதன் வழியாக
உருமாற்றி வைத்திருக்கிறது.
அதில்
புதிர் நிறைந்த ஒரு நினைவை
தேர்ந்தெடுத்தேன்.
என்றோ கைவிடப்பட்ட நினைவு அது
எவ்வித தயக்கமின்றி
அனுமதித்தது அந்நினைவு
அன்றிருந்த காலம்
மீண்டும் உருப்பெறுகிறது.
ஒரு நிமிடம்
கடந்த நிலையில்
வழியெங்கும் நிகழ்கால நினைவு
தன்னைத் துரத்துகிறது .
மீண்டும் அடையாளமிட்ட
தன் நினைவை
அங்கயே விட்டு வந்தடைந்தேன்
மன்னிப்பாயாக.

வளத்தூர் தி. ராஜேஷ்

படம்: இணையம்

இயற்கையின் நிழல்ப்படம்

அமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம்
உருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம்
பருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு
தன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே
வானவில்கள் வண்ண வண்ண கதிர்கள்
அரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே
தோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த
நிழல்களும் பூமியை விட்டு பிரபஞ்சம் நோக்கி பாயுதே
நட்சத்திரங்கள், ஒளித்திரள்கள் வண்ண வண்ண பூச்சியாய்
வானமெங்கும் பரவ, பால்ச்செம்பில் கால் பட்டு
தெறித்தோடிய பாலாறாய் தெற்கு வானில்
ஓடி வழிந்து நிழல்ப்படம் ஒன்றை வரையுதே!

சிறி சரவணா

படம்: இணையம்

ஒளியின் ஊடுருவல்

W.O._2008.0012

ஒளியின் ஊடுருவலில் நிழல்கள் தெரியலாம்
இலைகளின் மேலே படர்ந்துள்ள அந்த
நிழல்களின் முகங்களை வரைந்தவன் யார்?
அழகழகான வட்டங்கள் முக்கோணங்கள் மற்றும்
சதுரங்களும் சலனங்களும் எண்ணிலடங்கா பின்பங்களை
வண்ணமயமாக தெறித்துச் செல்கிறதே
வரைந்தவன் வரைந்துவிட்டான்,
காலத்தில் அவற்றை பதித்துவிட்டான்
பார்ப்பவர் மனங்கள் தேன் கண்ட வண்டுபோல
மயங்கிக் கிறுகிறுக்கும் என அவன் நினைத்தானோ
நினைத்தது நிலைத்தது, கதிர்களின் கீற்றுக்கள்
மீண்டும் இலைகளில் முகங்களை வரைய
நாளையும் வரவேண்டுமே

சிறி சரவணா

படம்: இணையம்

நிழலுக்கென்று ஒரு நிஜம்

நிழலுக்கு என்று ஒரு நிஜம்

தூரத்தில் பிம்பங்கள் சிறிதாகவே தெரிகிறது
தன்னை நோக்கி நகரும் புள்ளியின் மையத்தில்
அது தன்னைதானே பெரிதாக்கி கொள்கிறது
நிழலும் அதன் பாதையில் உண்டு
அதற்கு என்று நிஜமும் அதன் கைகளில் உண்டு
நிழலின் அமைப்பினிலே நம் கண்களினூடு
கட்சிகளை அது நிஜமாக்கிக்கொண்டே போகிறது

Continue reading “நிழலுக்கென்று ஒரு நிஜம்”

என்னுள்ளே என்னை தேடி

என்னுள்ளே என்னைத் தேடி

இனம்புரியாத கவலை நெஞ்சை மெதுவாக வருடுகிறது
நரம்பறுந்த இரத்தப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பது போல
மெல்லிய கவலை மை இருளாக என் உலகத்தை நிரப்புகிறது
இதுவரை நடந்தது நன்றாக நடந்து விட்டது
இனிமேலும், நடப்பது நன்றகேவே நடக்குமா

Continue reading “என்னுள்ளே என்னை தேடி”

கற்பனை

தேனீ
தேனீ

தோட்டத்தில் முதல் பெண்பூசணிப்பூ மலர்ந்து நிமிர்ந்திருந்தது. அதன் குவளை முழுவதும் நிரம்பியிருந்தத நீர். வேஷத்தேனீ அதுகண்டு சுழன்று மயங்கியது. என்ன நினைத்ததுவோ! புதையலைக் கண்ட பிக்குவைப் போல கூத்தாடிக் கூத்தாடிப் படையணிக்குப் பறந்தது. Continue reading “கற்பனை”