சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்

சூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர் என்பது அரிதாகக் காணப்படும் ஒரு வஸ்து என்றே கூறிவிடலாம். காரணம் அவ்வளவுக்கு அதிகளவான நீரை இந்தத் துணைக்கோள்கள் கொண்டுள்ளன. Continue reading “சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்”

வெள்ளியின் மின்சாரப் புயல்

ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரஸ் (2005 இல் வெள்ளிக்கு அனுப்பப்பட்டது) விண்கலத்தின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்களின் ஆய்வு முடிவுகள் வெள்ளியில் மின்சாரப் புயல் அடிப்பதாக தெரிவிக்கின்றது. இது வெள்ளியின் வளிமண்டலத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளை அகற்றியிருக்கலாம் என்றும், இதனால் வெள்ளியில் இருந்த சமுத்திரங்கள் அழிந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். Continue reading “வெள்ளியின் மின்சாரப் புயல்”

மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்!

இந்தப் பிரபஞ்சத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தாலும், மிகவும் மோசமான விடயம் அதன் அளவுதான். ரொம்ப பெரிசு இந்தப் பிரபஞ்சம். சூரியனுக்கும் பூமிக்குமே இடைவெளி 150 மில்லியன் கிமீ! ஒளிக்கு 8 சொச்சம் நிமிஷம் ஆகின்றது சூரியனில் இருந்து பூமிக்கு வருவதற்கு. இதுபோக, நமக்கு அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் 4.5 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. அங்கிருந்து ஒளி வருவதற்கு 4.5 வருடங்கள் எடுக்கும்; ஒளி ஒரு செக்கனுக்கு 300,000 கிமீ பயணிக்கும் என்பதும் கூடுதல் தகவல்! Continue reading “மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்!”

செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?

நமக்குத் தெரிந்தவரை செவ்வாய் ஒரு உறைந்துபோன பாலைவனக் கோள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, செய்மதிகள் தொடக்கம் தளவுலவிகள் மற்றும் தரையிரங்கிகள் மூலம் ஆய்வுசெயதவரை செவ்வாய் ஒரு காய்ந்துபோன குளிரான ஒரு இறந்த கோள் என்பது நமக்குத்தெரியும். ஆனால் செவ்வாய்க்கு என்ன நடந்தது என்பது ஒரு புதிராகவே இருந்தது. அதன் வளிமண்டலத்திற்கும், முழுக்கோளின் மேற்பரப்புக் கட்டமைப்பிற்கும் என்ன நடந்திருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை விஞ்ஞானிகள் முன்வைத்தனர்.

Continue reading “செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?”

ப்ளுட்டோவிற்கு அடுத்து?

எழுதியது: சிறி சரவணா

நாம் சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் சென்று பார்த்தாயிற்று. 1980 களில் புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள் வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அருகில் சென்று அவற்றைப் படம் பிடித்தது மட்டுமன்றி, அவற்றின் கட்டமைப்பு, காந்தப்புலம் போன்ற தகவல்களையும் எமக்குத் தெரியப்படுத்தியது.


சூரியத் தொகுதியைப் பற்றி அறிந்துகொள்ள எனது “சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்” என்ற இலவசமின்னூலை பார்க்கலாம்!


இதுவரை அருகில் சென்று விசிட் அடிக்காமல் இருந்த ஒருவர், மிஸ்டர் ப்ளுட்டோ! அவரையும் நாசாவின் நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் சென்று படம்பிடித்து அனுப்பிவிட்டது. இப்போது நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் கைப்பர் பட்டியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் சில பல ப்ளுட்டோ போன்ற சிறு கோள்கள் போன்ற வான்பொருட்களை அது அருகில் சந்திக்கும், ஆனால் அது நடைபெற 2019 வரை காத்திருக்கவேண்டும்!

Continue reading “ப்ளுட்டோவிற்கு அடுத்து?”

செவ்வாயில் கடலா?

செவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர் அளவு ஆழத்திற்கு நிரப்பக்கூடியளவு நீர். இப்போது இல்லை, பெரும்பாலும் எல்லாம் விண்வெளிக்கு போய்விட்டது. செவ்வாய் இப்போது ஒரு பாலைவனம் தான்.

Continue reading “செவ்வாயில் கடலா?”