எழுதியது: சிறி சரவணா
இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது சற்று வித்தியாசமான உயிரினம் போலத் தெரிகிறதா? வயதுபோன தாத்தாவின் சவரம் செய்யப்பட முடி? இல்லை இல்லை! இது வெறும் பனி என்றல் உங்களால் நம்ப முடிகிறதா? விரிவாகப் பார்ப்போம்.
சில காடுகளில் ஈரப்பதம் கூடிய குல்ரிகால இரவுகளில் இப்படியான பனி அமைப்பு இறந்துபோன மரத்துண்டுகளில் உருவாகின்றது. இப்படி இரவில் உருவாகும் இந்த முடி போன்ற பனியால் ஆனா அமைப்பு, காலை சூரியனைக் கண்டதும் உருகிவிடும். மீண்டும் அடுத்த இரவில் உருவாகும்!