பிரபஞ்சத்தில் நடைபெறும் சமையல் என்பது, நம் வீட்டில் சமைப்பது போலவே; சரியான சேர்மானங்களை (மா, பால், முட்டை) சரியான முறையில் சேர்த்தால் (சூடான சமையல்ப் பாத்திரம்), அருமையான ருசியான ஒன்று இறுதியில் கிடைக்கும் (அப்பம்)!
இந்தப் பிரபஞ்சமும் இப்படியாகத்தான் பிரபஞ்சப் பொருட்களை சமைக்கிறது. உயிர்கள், கோள்கள் மற்றும் நாம் பார்க்கும் அனைத்திற்குமே மூல காரணி அல்லது சேர்மானமாக இருப்பது மூலக்கூறுகளே. ஆனாலும் மூலக்கூறுகள் முதலில் உருவாகவேண்டியது அவசியம்.