இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்கவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் முறுகிய பனிப்போர் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டுவந்தது என்றால் சற்றே முரணான விடையம்தான். பனிப்போர் நடந்திருக்காவிட்டால் மனிதன் நிலவில் கால் வைத்திருப்பானா என்பதே ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கேள்விக்குறி! Continue reading “பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்”
குறிச்சொல்: பிரபஞ்சம்
LIGO ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஈர்ப்பு அலைகளை கண்டறிந்துவிட்டதாக நேற்று உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டனர். ஐன்ஸ்டீன் கூறிய பொதுச்சார்புக் கோட்பாட்டின் ஒரு அடிப்படை அம்சமான ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இதுவரை கண்டறியப்படாமலே இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் இந்தக் கண்டுபிடிப்பை பற்றி நாம் விளங்கிக்கொள்வதற்கு ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன, அது ஏன் பிரபஞ்ச அறிவியலில் அவசியமாகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த LIGO எனப்படும் Laser Interferometer Gravitational-Wave Observatory, ஏன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த ஈர்ப்பு அலைகளை கண்டறிய ஆய்வுகளை நடாத்தினர் என்று உங்களுக்குப் புரியும். ஆகவே முதலில் ஈர்ப்பு அலைகள் என்றால் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்!
பிரபஞ்சத்தின் முதலாவது பாரிய விண்மீன் பேரடைகள் எப்போது உருவாகின என்பது பற்றிய புதிய ஆய்வு.
நமது பிரபஞ்சம் தோன்றி அண்ணளவாக 13.7 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று இயற்பியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆரம்பத்தில் உருவாகிய விண்மீன்கள் மற்றும் பேரடைகள் எப்பொழுது உருவாகின, அதாவது, பிரபஞ்சம் தோன்றி எவ்வளவு காலத்தின் பின்னர் முதலாவது விண்மீன்கள் மற்றும் முதலாவது விண்மீன் பேரடைகள் தோன்றின என்பது பற்றிய முழுமயான புரிதல் இன்றும் பூரணமாகவில்லை.
இந்தப் பிரபஞ்சம் எண்ணிலடங்காத விண்மீன் பேரடைகளைக் கொண்டுள்ளது; ஒவ்வொரு விண்மீன் பேரடையும் பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்டுள்ளது. பிரபஞ்சம் உருவாகி அதன் பின்னர் அது குளிர்வடைந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரோஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் ஒன்று சேர்ந்து விண்மீன்கள் உருவாகின.
எப்போதுமே எமக்கு இருக்கும் கேள்வி, இந்தப் பிரபஞ்சம் உருவாகி எவ்வளவு காலத்தில் முதலாவது விண்மீன்களும் விண்மீன் பேரடைகளும் உருவாகின என்பதுதான்.
Continue reading “பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்: ஹபிளின் கண்டுபிடிப்பு”
எழுதியது: சிறி சரவணா
என்ன தலைப்பே ஏடாகூடமா இருக்கே அப்படின்னு நீங்க நினைப்பது கேட்கிறது. ஆனால் புதிய ஆய்வு முடிவுகள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனாலும் பயப்படத்தேவையில்லை! அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் அழிந்துவிடாது. என்ன செய்தி என்று பார்க்கலாம்.
விண்ணியல் ஆய்வாளர்கள் அண்ணளவாக 200,000 விண்மீன்பேரடைகளை அகச்சிவப்புக் கதிர்வீச்சு, ஒளி மற்றும் புறவூதாக்கதிர்வீச்சு ஆகிய நிறமாலைகளில் ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல் சற்று ஆச்சரியமானது – அதாவது பிரபஞ்சம் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட சக்தியின் அளவில் பாதியைத்தான் தற்போது வெளியிடுகிறதாம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய சக்தியின் அளவை விட பாதியளவே தற்போது இந்த விண்மீன்பேரடைகள் உருவாக்குகிறது!
புதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது!

இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், எதிர்காலத்தில், அதாவது ஆயிரக்கணக்கான பில்லியன் வருடங்களின் பின்னர் இந்தப் பிரபஞ்சத்தில் சக்தியை உருவாக்க எதுவும் (விண்மீன்கள்) இருக்கப்போவதில்லை. பெரும்குளிரில் இந்தப் பிரபஞ்சம் முடிவடையலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
எப்படியோ தற்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அப்படிக் கவலைப்படவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் ‘சுவாகா’ என்று பூமியை தன்னுள்ளே விழுங்க காத்திருக்கும் நம் சூரியனைப் பற்றிக் கவலைப்படலாம்!
ஹவாயில் நடைபெறும் சர்வதேச விண்ணியல் கழகத்தில் கூட்டத்திலேயே இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. ஏழு விண்வெளி ஆய்வு நிலையங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதற்கு GAMA என பெயரிட்டுள்ளனர்.
அதிகளவான விண்மீன்பேரடைகளை ஆய்வு செய்து அவற்றின் சக்தி வெளியீட்டைப் பற்றிப் படிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். இந்த GAMA ஆய்வு, 21 வேறுபட்ட அலைநீளங்களில் விண்மீன்பேரடைகளை ஆய்வுசெய்கிறது.
1990 களில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி வெளியீட்டின் அளவு குறைந்துகொண்டு வருகிறது என்று ஆய்வாளர்கள் அறிவர், ஆனாலும் GAMA ஆய்வுதான் முதன் முதலில் விண்மீன்பேரடைகளின் சக்திவெளியீட்டின் அளவை அளக்கிறது.
விண்மீன்பேரடைகளின் சக்தி வெளியீட்டின் அளவு குறைந்து கொண்டு வருவது, இந்தப் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவது ஆகிய இரண்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கரும்சக்தி எனப்படும் இன்னும் தெளிவாக அறியப்படாத “சக்தி” இந்தப் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்கிறது என்பது மட்டுமே தற்போது எமக்குத் தெரியும்.
கரும்சக்தி, மற்றும் கரும்பொருள் பற்றி அறிய இந்தக் கட்டுரையைப் பாருங்கள் – கரும்பொருள் – பிரபஞ்சத்தின் இன்னுமொரு ரகசியம்
தகவல்: Discovery News
மேலும் சிறய அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்!
https://www.facebook.com/parimaanam
எமது பிரபஞ்சம் போலவே ஒரு பிரபஞ்சம் செய்ய என்ன சேர்மானங்கள் தேவை? இதோ பின்வருவன:
- 3 கப் ஹைட்ரோஜன்
- 1 கப் ஹீலியம்
- தேவையானளவு லிதியம்
- கொஞ்சமே கொஞ்சம் பெரிலியம்
இப்போது இவை அனைத்தையும் ஒன்றாக நசுக்கி மிக மிகச் சிறியவொரு பந்தாக ஒன்று திரட்டி பாதுகாப்பான தூரத்தில் வைத்துவிட்டு, இப்போது சற்று தொலைவில் நின்றுகொள்வோம், பெருவெடிப்பிற்காக!
எழுதியது: சிறி சரவணா
பொதுவாக எல்லோருக்கும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கும். பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் “முகம்பார்க்கும் கண்ணாடி” எந்தவித மாற்றமுமின்றி அப்படியே நமது பிம்பத்தைப் பிரதிபலிக்கும். ஆனால் நீங்கள் வாகனங்களின் இரு புறங்களில் இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்ததுண்டா? குவிவாடி என்று அழைக்கப்படும் இவை, சற்று மேல்நோக்கி வளைந்த ஆடிகள் (கண்ணாடிக்காண அறிவியல் பதம்), வளைவில்லாத முகம்பார்க்கும் கண்ணாடிகளைப் போல அன்றி, அதைவிட அதிகளவு வீச்சுக் கொண்ட பிம்பங்களை அதானல் தோற்றுவிக்க முடியும். வாகனங்களில் இதைப் பயன்படுத்தும் நோக்கம், பின்னால் வரும் வாகனங்களை இலகுவாக அவதானிப்பதற்கு ஆகும்.
Continue reading “பிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி!”
எழுதியது: சிறி சரவணா
நம் பிரபஞ்சம் உருவாகி கிட்டத்தட்ட 13.8 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நம்பர் எங்கிருந்து வந்து என்றால், எல்லாம் ஐன்ஸ்டின் வித்திட்டது தான், அவரது பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து செயப்பட்ட கணிப்புக்களே இந்த 13.8 பில்லியன் வருடங்கள் என்ற வரையரைக்குக் காரணம்.
அப்படியென்றால் அந்த 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன் என்ன இருந்தது? இந்தப் பிரபஞ்சம் அப்போது எங்கே இருந்தது என்று கேள்விகள் எழும்பலாம் தானே? நிச்சயம். நீங்கள் பெருவெடிப்பு (Big Bang) என்று கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது இந்த பிரபஞ்சமானது 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகச்சிறிய புள்ளியளவு இருந்ததாக இயற்பியலாளர்கள் கருதுகின்றனர், அதை ஒருமைப்புள்ளி (singularity) என்று அழைகின்றனர். இந்த ஒருமைப்புள்ளி அளவு இருந்தபோது, பிரபஞ்சம் மிக மிக வெப்பமானதாகவும், அளவில் அனுத்துனிக்கைகளை விட சிறிதாகவும் இருந்தது.
Continue reading “பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்”
இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. அனால் அறிவியலைப் பொருத்தவரையில் நம்பிக்கையின் அடிபடையில் எதுவுமே முடிவு செய்யப் படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும்.