பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்

சுப்பர் நிலவு என்றால் என்ன? பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதையைப் போலவே பூமியைச் சுற்றிவரும் நிலவின் பாதையும் நீள்வட்டமானதே. இப்படியாக பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போது, பூமிக்கு மிக அருகில் வரும் ஒரு சந்தர்ப்பமும், அதேபோல பூமியில் இருந்து தொலைவிற்கு செல்லக்கூடிய சந்தப்பமும் நிலவுக்கு ஏற்படும். பூமிக்கு மிக அருகில் வரும் போது வழமைக்கு மாறாக நிலவின் அளவு பெரிதாகவும் அதன் காரணமாக பிரகாசமாகவும் இருக்கும். இதுவே சுப்பர் நிலவு / பெருமுழுநிலவு (Supermoon) என அழைக்கப்படுகிறது. அதேபோல பூமியை விட்டு தொலைவில் இருக்கும் போது வழமைக்கு மாறாக சிறிதாக இருக்கும் நிலவு மைக்ரோ நிலவு எனப்படுகிறது. Continue reading “பெருமுழுநிலவு என்னும் சுப்பர் மூன்”

15000 விண்கற்களுக்கும் மேல்

ஒவ்வொரு நாளும் பூமியில் 100 தொன் எடையுள்ள சிறிய மணல் துணிக்கையளவு உள்ள விண்கற்கள் விழுகின்றன. அண்ணளவாக இது 14 யானைகளின் நிறைக்குச் சமம்.

வருடத்திற்கு ஒரு முறை, கார் அளவுள்ள விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து தரையை அடையும் முன்னரே பாரிய தீப்பிழம்பாக வானில் எரிந்து சாம்பலாகிவிடும். Continue reading “15000 விண்கற்களுக்கும் மேல்”

காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்

இந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு உயிர்களை இது பாதுகாக்கிறது. இப்படியான பாதுகாப்பு அரண்களில் முக்கியமான ஒன்று பூமியின் காந்தப்புலம். Continue reading “காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்”

சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்

சூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர் என்பது அரிதாகக் காணப்படும் ஒரு வஸ்து என்றே கூறிவிடலாம். காரணம் அவ்வளவுக்கு அதிகளவான நீரை இந்தத் துணைக்கோள்கள் கொண்டுள்ளன. Continue reading “சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்”

வெள்ளியின் மின்சாரப் புயல்

ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரஸ் (2005 இல் வெள்ளிக்கு அனுப்பப்பட்டது) விண்கலத்தின் உதவியுடன் பெறப்பட்ட தகவல்களின் ஆய்வு முடிவுகள் வெள்ளியில் மின்சாரப் புயல் அடிப்பதாக தெரிவிக்கின்றது. இது வெள்ளியின் வளிமண்டலத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளை அகற்றியிருக்கலாம் என்றும், இதனால் வெள்ளியில் இருந்த சமுத்திரங்கள் அழிந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். Continue reading “வெள்ளியின் மின்சாரப் புயல்”

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

பூமி உருவாகி முதன் முதலில் சமுத்திரங்கள் தோன்றி இருந்த காலப்பகுதியில் சமுத்திரங்கள் மிக அதிகமான வெப்பநிலையில் காணப்பட்டன என்றே இதுவரை கருதப்பட்டது. ஆனால் புதிய ஆய்வு முடிவு வேறுவிதமாகக் கூறுகின்றது. அதாவது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது. Continue reading “3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்”

பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்

நாம் எல்லோரும் அறிவியலின் தத்துவப்படி கூர்ப்பின் மூலமாக ஒரு கல அங்கியாக இருந்து இப்போது செவ்வாயில் விண்கலங்களை இறக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்ற ஒரு உயிரினமாக, வளர்ந்து நிற்கிறோம். இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விடவில்லை, இயற்கைத் தேர்வு முறையில் படிப்படியாக நாம் மாற்றமடயதான் போகிறோம், உயிர் என்ற ஒன்று இருக்கும் வரை மற்றம் என்ற ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கும்.

Continue reading “பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்”