எழுதியது: சிறி சரவணா
பல்வேறுபட்ட நாடுகளும் அமைப்புக்களும் சூழலை மாசுபடுத்தக்கூடிய கனிம எண்ணெய்களைப் (petroleum) பயன்படுத்தி தங்கள் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி (renewable energy) வளங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டன. இது ஒரு நல்ல மாற்றமாகும். பெரும்பாலான சூழலியல் விஞ்ஞானிகள் மனிதனது செயற்பாடு காரணமாகவே “புவி வெப்பமடைதல்” அதிகரிக்கிறது என்று கூறுவது ஒருபுறம் இருப்பினும், புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் குறைந்தவிலையில் பெரிய நன்மையைச் செய்கிறது என்பதும் ஒரு காரணம்.