எழுதியது: சிறி சரவணா
இந்த இயற்கை பல புதிய அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எந்தவித மாறுபாடுகளும் இருக்கமுடியாது. இயற்கையில் இருந்துவரும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புக்களும் எதோ ஒரு விதத்தில் எமது ஆச்சரியத்தை தூண்டுவதாகவே இருக்கிறது. உண்மையில் பார்க்கப்போனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பின் பின்னரும் எமது ஆச்சரியம் குறையவேண்டும் அல்லவா, ஏனென்றால் எமக்குத் தெரிந்த விடயங்கள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே! ஆனால் இந்த இயற்கை அதற்கும் விதிவிலக்காக இருக்கறது.
ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் எமக்குத் தெரிந்தவற்றைவிடவும் தெரியாத பல விடயங்களைக் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகிறது, அந்தவகையில் ஒரு புதிய ஆச்சரியமிக்க ஒரு கண்டுபிடிப்பே Erythropsidinium எனப்படும் ஒரு ஒருகல அங்கி. அப்படி என்ன விசேசம் இந்த அங்கியில் இருக்கிறது என்றால், இதன் கண்கள் போன்ற அமைப்பு!
Continue reading “துல்லியமான கண்களைக் கொண்ட ஒருகல அங்கி : புதிய புதிர்”