மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்

எழுதியது: சிறி சரவணா

2004 இல் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட மெசெஞ்சர் (MESSENGER) விண்கலம் புதனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட ரோபோ விண்கலமாகும். புதனை சுற்றிவந்து ஆய்வு செய்த முதலாவது விண்கலமும் இதுதான். 485 kg எடை கொண்ட மெசெஞ்சர், 2011 இல் புதனை சுற்றத்தொடங்கியது. புதனைப் பற்றிய பல்வேறு அதிசயிக்கத் தக்க தகவல்களை இது நமக்கு தெரிவித்தது.

இன்னும் சில நாட்களில் மெசெஞ்சர் விண்கலம் தனது பத்து வருட பயணத்தை முடிக்கப்போகிறது. ஆம், அது புதனோடு சென்று மோதப்போகிறது. இதுவும் அதனது ஆய்வுத்திட்டத்தில் ஒரு பகுதிதான். ஏப்ரல் 30 அளவில் செக்கனுக்கு 3.91 கிலோமீட்டர் வேகத்தில் அது புதனோடு மோதும். அது புதனில் வளிமண்டலத்தில் நுழையும் போது சேகரிக்கும் தகவல்களையும், அது மோதும் வரை கிடைக்கும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பிவிட்டே அது தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

Continue reading “மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்”

நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது.

  2. நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி வருடங்கள் எடுக்கிறது.

  3. யுரேனசைப் போல நெப்டியுனும் ஒரு ‘பனி’ அரக்கனாகும். இது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மெதேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.

  4. நெப்டியுனின் மையப்பகுதியில் பூமியளவுள்ள பாறைக்கோளம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  5. நெப்டியுனின் வளிமண்டலம், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகிய வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.

  6. நெப்டியுனுக்கு 13 உறுதிசெய்யப்பட்ட துணைக்கோள்கள் உண்டு. இவற்றுக்கு, கிரேக்க நீர்க் கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.

  7. நேப்டியுனுக்கும் சனியைப் போலவே அதனைச் சுற்றி ஆறு வளையங்கள் உண்டு.
  8. யுரேனசைப் போலவே, நெப்டியுனுக்கும் அருகில் சென்ற ஒரே விண்கலம் வொயேஜர் 2 மட்டுமே.

  9. நெப்டியுனில் நாமறிந்த உயிர் வாழத் தேவையான காரணிகள் இல்லை.

  10. புளுட்டோ, சூரியனில் இருந்து நெப்டியுனைவிட மிகத் தொலைவில் சுற்றினாலும், சில வேலைகளில், அது நேப்டியுனை விட சூரியனுக்கு அருகில் செல்கிறது, இதற்கு காரணம், புளுட்டோவின் நீள்வட்டப் பாதையே.

சனியைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.

  2. சனி தன்னைத்தானே சுற்ற 10.7 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 பூமி ஆண்டுகள் எடுக்கிறது.

  3. வியாழனைப்போல சனியும் ஒரு வாயு அரக்கனாகும். பாறைகளால் ஆன மேற்பரப்பு அற்ற வெறும் வாயுக்கோள்.

  4. சனியின் மேற்பரப்பு ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. சனியின் மையப்பகுதியில் வியாழனைப்போலவே பாறையால் ஆன கோளம் ஒன்று இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  5. சனிக்கு உறுதிசெய்யப்பட்ட 53 துணைக்கோள்களும், உறுதிசெய்யப்படாத 9 துணைக்கோள்களும் உண்டு.

  6. சூரியத்தொகுதியிலேயே மிக அழகான, பெரிய வளையங்களைக் கொண்டுள்ள கோள் சனி மட்டுமே. இந்த வளையங்களில் பல்வேறு பிரிவுகளும், இடைவெளிகளும் இருக்கின்றன.

  7. சனியின் வளையங்கள், பனிக்கட்டித் துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வளையங்களின் சராசரித் தடிப்பு வெறும் 10 மீட்டர்கள்தான்.

  8. சனிக்கு இதுவரை 5 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2004 இல் இருந்து, கசினி விண்கலம், சனியையும், அதன் வளையங்கள் மற்றும் துணைக்கோள்களை ஆராய்ந்துவருகிறது.

  9. நாமறிந்து சனியில் உயிர்வாழத்தேவையான காரணிகள் இல்லை. அனால் சில சனியின் துணைக்கோள்களில் திரவமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு உயிர் தோன்றுவதற்கான காரணியாக இருக்கலாம்.

  10. சனியின் காந்தப்புலமானது பூமியின் காந்தப்புலத்தைப் போல 578 அதிகமானது.

சூரியத் தொகுதி: ஒரு அறிமுகம்

எழுதியது: சிறி சரவணா

சூரியத்தொகுதி என்பது, சூரியனையும், அதனைச் சுற்றி வரும், கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள், குறுங்கோள்கள், வான்கற்கள், வால்வெள்ளிகள் என்பனவற்றை கொண்ட ஒரு அமைப்பாகும். எமது சூரியத்தொகுதி, பால்வீதி எனப்படும், நட்சத்திரப்பேரடையில் இருக்கும் பில்லியன் கணக்கான நட்சத்திரத்தொகுதிகளில் ஒன்றாகும்.

சூரியத்தொகுதியில் மிக முக்கிய அம்சமாக இருப்பது, மையத்தில் இருக்கும் சூரியனும், அதனைச்சுற்றிவரும் 8 கோள்களுமாகும்.

சூரியத்தொகுதியைப் பொறுத்தவரை, சூரியனே மிகமுக்கியமான அமைப்பாகும். சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99% ஆன திணிவை சூரியனே கொண்டுள்ளது. மற்றைய கோள்கள், குறுங்கோள்கள் ஏனைய பொருட்கள் எல்லாம் எஞ்சிய 1% திணிவிலேயே அடங்கிவிடும்.

Continue reading “சூரியத் தொகுதி: ஒரு அறிமுகம்”

கோள்கள்: ஒரு அறிமுகம்

எழுதியது: சிறி சரவணா

அறிவியல் என்பது ஒரு தொடர்ச்சியான மாறுதல்களுக்கு உட்பட்ட ஒரு செயன்முறை. அதில் கேள்வி கேட்டல், முன்கருத்தை உருவாக்குதல், கண்டறிதல், முன்னைய கருத்துக்களை புதுக்கண்டுபிடிப்புக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் என்று இந்தச் செயன்முறை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். அறிவியல் கண்டுபிடிப்புக்களே, தர்க்கரீதியாக கண்டறிந்து அதனைப் பரிசோதனை செய்து அதிலிருந்து முடிவிகளைப் பெற்றே உருவாக்கப்படுகின்றன.

இப்போது விடயத்திற்கு வருவோம். இந்தப் பிரபஞ்சம் பற்றியும் அதனது தோற்றம் பற்றியும் நமது கருத்துக்கள், ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. புதிய உத்திகளைப் பயன்படுத்தி நாம் சேகரிக்கும் தரவுகள், எம்மைப் புதிய பாதையில் சிந்திக்கத் தூண்டுகின்றன. இப்படியான புதிய தரவுகள், நாம் பொருட்களை எப்படி வகைப்படுத்தியுள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய கருத்துக்கள், அல்லது ஒரு பொருளை நாம் பார்க்கும் கோணம், ஒரு கோட்பாட்டை ஆராய்வதன் மூலம் உருவாகிறது.

Continue reading “கோள்கள்: ஒரு அறிமுகம்”