நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்

ஜூலை 10: தலை சிறந்த விஞ்ஞானியும், கண்டுபிடிப்பாளருமான நிகோலா டெஸ்லாவின் (1856 – 1943) பிறந்த நாள். சைபீரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்கா என்கிற கனவு தேசத்திற்கு வந்து, நாமெல்லாம் நன்றாக இன்று தெரிந்துவைத்திருக்கும் தாமஸ் எடிசனிடம் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்த இந்த மனிதனை அறிந்தவர் சிலரே. Continue reading “நிகோலா டெஸ்லா என்னும் மறக்கப்பட்ட மனிதர்”

48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய கற்பமான குதிரை எலும்பு கண்டுபிடிப்பு

ஜெர்மனியில் 48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய குதிரை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியவிடயம் இந்தக் குதிரை கற்பமாக இருந்துள்ளதுடன், அதன் குட்டியின் திசுக்கள் மற்றும் எலும்புகள் சில அப்படியே பாதுகாப்பாகவும் இருகின்றது.

கடந்த வருடத்தில் முள்ளந்தண்டுள்ள தொல்லுயிரியல் கழகத்தின் கூட்டத்தில் இந்தக் குதிரையின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டாலும், புதிய ஆய்வு முடிவுகள், தாய்க்குதிரையின் கருப்பை சார்ந்த பகுதிகளில் இருக்கும் சிதையாத திசுக்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழமையான உயிரினங்களில் மிகப்பழைய படிமமாகும் எனக் கூறுகின்றது.

Continue reading “48 மில்லியன் வருடங்களுக்கு முந்திய கற்பமான குதிரை எலும்பு கண்டுபிடிப்பு”

மாவீரன் அலக்சாண்டர் – தெரிந்ததும் தெரியாததும்

எழுதியது: சிறி சரவணா

இந்தப் பதிவில் கொஞ்சம் வரலாற்றையும் பார்க்கலாம். நமக்கு கொஞ்சம் தூக்கலாகவே பரீட்சியமான வரலாற்றுப் பெயர், மாவீரன் அலக்சாண்டர். நமது உள்ளூர் வரலாற்றில் இடம்பெராவிடினும், இவனது மாவீரமும், துணிச்சலும் அக்காலத்திலேயே ஐரோப்பாவில் இருந்து தற்கால பாகிஸ்தான் வரை தனது ஆட்சியை நிலைநிறுத்திய விதமும் இவனை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சாதனைகள் எனலாம்.

Continue reading “மாவீரன் அலக்சாண்டர் – தெரிந்ததும் தெரியாததும்”

நியண்டர்தால் இனஅழிவில் மனித இனத்தின் பங்களிப்பு – புதிய தடயங்கள்

நியண்டர்தால் இனமே (Neanderthals), தற்கால மனித இனத்திற்கு (Homo sapiens) மிக நெருங்கிய ஆனால் தற்போது முற்றாக அழிந்துவிட்ட இனமாகும். அண்மையில் இத்தாலி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பற்கள், புதிய மனித இனம், இந்த நியண்டர்தால் இனத்தின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

நியாண்டர்தால்கள் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் வாழ்ந்துள்ளனர். இவர்கள் மனித இனத்தோடு சேர்ந்து இனப்பெருக்கம் செய்ததற்கு சான்றாக, இன்று ஆபிரிக்காவுக்கு வெளியே உருவாகிய மனித இனத்தின் DNA வில் 1.5 தொடக்கம் 2.1 வீதமான DNA கூறுகள் நியண்டர்தாலின் DNA பகுதிகளாகும்!

ஆய்வுகளின் படி, நியண்டர்தால்கள் 41000 – 39000 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து மறைந்துள்ளனர். இவர்களது அழிவுக்கு மனிதஇனம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Continue reading “நியண்டர்தால் இனஅழிவில் மனித இனத்தின் பங்களிப்பு – புதிய தடயங்கள்”