இணையம் – ஏன், எதற்கு & எப்படி! (பகுதி 1)

நாம் தினமும் பயன்படுத்தும் தொழில்நுட்பமான இணையம் எப்படி தொழிற்படுகிறது என்பது பற்றிய ஒரு விளக்கம்.

இன்டர்நெட்! இணையம்!! இன்று எங்குபார்த்தாலும் பேஸ்புக், டுவிட்டர் என்று எல்லோருமே தங்கள் ஸ்மார்ட்போனில் ஓடுறது, பாயிறது, பறக்கிறது, பதுங்கிறது என்று எல்லாவற்றையும் ‘ஷேர்’ செய்துகொண்டு இருகின்றனர். பெரும்பாலான சாதாரணப் பாவனையாளருக்கு இணையம் எவ்வளவு பெரியது என்றோ அல்லது எப்படி இணையம் இயங்குகின்றது என்றோ தெரிவதில்லை. தெரியவேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லை; ஆனால் விருப்பமிருந்தால், உங்கள் செல்போனில் எப்படி யூடியுப் வீடியோ வருகிறது என்று தெரியவேண்டும் என்று ஆர்வமிருந்தால், மேற்கொண்டு வாசிக்கலாம்!

Continue reading “இணையம் – ஏன், எதற்கு & எப்படி! (பகுதி 1)”

நடுவில் ஒரு அரக்கன்

இந்தப் பிரபஞ்சம் பெரும்பாலும் வெறுமையானதுதான். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன், அண்ணளவாக 40 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. நாம் தற்போது வைத்திருக்கும் மிக வேகமாகச் செல்லக்கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கு செல்லவேண்டுமென்றாலும் கிட்டத்தட்ட 80,000 வருடங்கள் எடுக்கும். ஆகவே தொலைவில் இருக்கும் விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகள் என்பவற்றை அடைய பல மில்லியன் வருடங்கள் எடுக்கும்.

Continue reading “நடுவில் ஒரு அரக்கன்”

விண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்

விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பு, Threshold 2 என அழைக்கப்பட்ட பதிப்பு கடந்த வாரத்தில் வெளியிடப்பாது. ஏற்கனவே விண்டோஸ் 10 இல் இயங்கும் கணணிகளில், விண்டோஸ் அப்டேட் மூலம் இது தானாகவே நிறுவப்படும். அல்லது ISO கோப்பைத் தரவிறக்கி பூரணமான தனி நிறுவலாகவும் நிறுவிக்கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் முன்னரே தெரிவித்தபடி, விண்டோஸ் 10 என்பதே விண்டோஸ் பதிப்பின் கடைசிப் பதிப்பாகும். அப்படியென்றால், விண்டோஸ் 11 என்று அடுத்த பதிப்பு வெளியிடப்படாமல், விண்டோஸ் 10 என்னும் பெயரிலேயே புதிய அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் விண்டோஸ் இயங்குமுறைமைக்கு விண்டோஸ் அப்டேட் மூலம் கொடுக்கப்படும்.

Continue reading “விண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்”

பிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ?

பிரபஞ்சத்தின் முதலாவது பாரிய விண்மீன் பேரடைகள் எப்போது உருவாகின என்பது பற்றிய புதிய ஆய்வு.

நமது பிரபஞ்சம் தோன்றி அண்ணளவாக 13.7 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று இயற்பியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஆரம்பத்தில் உருவாகிய விண்மீன்கள் மற்றும் பேரடைகள் எப்பொழுது உருவாகின, அதாவது, பிரபஞ்சம் தோன்றி எவ்வளவு காலத்தின் பின்னர் முதலாவது விண்மீன்கள் மற்றும் முதலாவது விண்மீன் பேரடைகள் தோன்றின என்பது பற்றிய முழுமயான புரிதல் இன்றும் பூரணமாகவில்லை.

Continue reading “பிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ?”

சாம்பி விண்மீன்களும் சூரியத் தொகுதியின் விதியும்

உலகின் பல பாகங்களிலும், வருடத்தின் பயங்கரமான பகுதியாகிய ஹலோவீன் (Halloween) முடிந்துவிட்டது. ஆனால் இந்தப் பிரபஞ்சம் எமக்கு இறுதியாக இன்னுமொரு அதிர்ச்சியைக் கொடுக்கக் காத்திருக்கிறது, அதுதான் சாம்பி (zombie) விண்மீன்!

இதுவொன்றும் சாதாரண மாறுவேடப்போட்டி அல்ல! இந்தப் படத்தின் மத்தியில் இருக்கும் விண்மீன் தனது சாவில் இருந்து மீண்டும் உயிர்ப்பித்து வந்துவிட்டது… மேலும் அது மிகவும் பசியுடன் இருக்கிறது.

Continue reading “சாம்பி விண்மீன்களும் சூரியத் தொகுதியின் விதியும்”

அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

எழுதியது: சிறி சரவணா

“குளோபல் வார்மிங்” என்ற சொல் எமக்குப் பரிட்சியமானது. அது பற்றிய பொதுவான புரிதல், பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதுதானே. அது தவறு என்ற காரணத்தால்தான், விஞ்ஞானிகள் தற்போது குளோபல் வார்மிங் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் “கிளைமேட் சேஞ்” அல்லது காலநிலை மாற்றம் என்கிற சொற்தொடரைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் பூமியொரு சிக்கலான பொறிமுறையைக் கொண்டு செயற்படும் பாரிய அமைப்பு. அதன் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றத்தை வெறும் “வெப்பநிலை மாற்றம்” என்று கூறிவிடமுடியாது.

Continue reading “அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி”

செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?

நமக்குத் தெரிந்தவரை செவ்வாய் ஒரு உறைந்துபோன பாலைவனக் கோள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, செய்மதிகள் தொடக்கம் தளவுலவிகள் மற்றும் தரையிரங்கிகள் மூலம் ஆய்வுசெயதவரை செவ்வாய் ஒரு காய்ந்துபோன குளிரான ஒரு இறந்த கோள் என்பது நமக்குத்தெரியும். ஆனால் செவ்வாய்க்கு என்ன நடந்தது என்பது ஒரு புதிராகவே இருந்தது. அதன் வளிமண்டலத்திற்கும், முழுக்கோளின் மேற்பரப்புக் கட்டமைப்பிற்கும் என்ன நடந்திருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை விஞ்ஞானிகள் முன்வைத்தனர்.

Continue reading “செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?”

மத்தியில் இளமையான நமது பால்வீதி

நிலவற்ற ஒரு இரவில் நீங்கள் நல்ல இருளான வேளையில், வானை அவதானித்து இருந்தால், ஒரு மெல்லிய பிரகாசம் வானின் ஒரு பெரிய பகுதியை சூழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒரு பகுதி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வீங்கியது போலவும் தெரியும். அதுதான் எமது விண்மீன் பேரடையான பால்வீதியாகும். பண்டைய கிரேக்கர்கள் இந்த அமைப்பை “galaxias kyklos” என அழைத்தனர். அப்படியென்றால், பால் போன்ற வட்டம் என்று பொருள். இதிலிருந்துதான் நாம் தற்போது விண்மீன் பேரடைகளை அழைக்கும் ஆங்கிலச் சொல்லான, “galaxy” என்கிற சொல்லும், எமது விண்மீன் பேரடையை அழைக்கும் “பால்வீதி” என்கிற சொற்பதமும் வந்தது.

Continue reading “மத்தியில் இளமையான நமது பால்வீதி”

மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி

சின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் “கிடைத்திருந்த” அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்!

Continue reading “மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி”