சனியைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.

  2. சனி தன்னைத்தானே சுற்ற 10.7 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 பூமி ஆண்டுகள் எடுக்கிறது.

  3. வியாழனைப்போல சனியும் ஒரு வாயு அரக்கனாகும். பாறைகளால் ஆன மேற்பரப்பு அற்ற வெறும் வாயுக்கோள்.

  4. சனியின் மேற்பரப்பு ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. சனியின் மையப்பகுதியில் வியாழனைப்போலவே பாறையால் ஆன கோளம் ஒன்று இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  5. சனிக்கு உறுதிசெய்யப்பட்ட 53 துணைக்கோள்களும், உறுதிசெய்யப்படாத 9 துணைக்கோள்களும் உண்டு.

  6. சூரியத்தொகுதியிலேயே மிக அழகான, பெரிய வளையங்களைக் கொண்டுள்ள கோள் சனி மட்டுமே. இந்த வளையங்களில் பல்வேறு பிரிவுகளும், இடைவெளிகளும் இருக்கின்றன.

  7. சனியின் வளையங்கள், பனிக்கட்டித் துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வளையங்களின் சராசரித் தடிப்பு வெறும் 10 மீட்டர்கள்தான்.

  8. சனிக்கு இதுவரை 5 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2004 இல் இருந்து, கசினி விண்கலம், சனியையும், அதன் வளையங்கள் மற்றும் துணைக்கோள்களை ஆராய்ந்துவருகிறது.

  9. நாமறிந்து சனியில் உயிர்வாழத்தேவையான காரணிகள் இல்லை. அனால் சில சனியின் துணைக்கோள்களில் திரவமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு உயிர் தோன்றுவதற்கான காரணியாக இருக்கலாம்.

  10. சனியின் காந்தப்புலமானது பூமியின் காந்தப்புலத்தைப் போல 578 அதிகமானது.

டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்

எழுதியது: சிறி சரவணா

அறிவியல் ரீதியாக மனிதன் வளர வளர, அவனது கைக்கு எட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாம் முன்பு ஒருமுறை, வேற்றுக்கிரக நாகரீகங்கள் என்ற பகுதியில் ஒரு நாகரீகமானது எவ்வாறு வளர்சியடைத்து செல்லலாம் என்று பார்த்தோம். அந்தக் கட்டுரைகளை கீழுள்ள இணைப்பின் மூலம் வாசித்துக் கொள்ளுங்கள்.

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – கட்டுரைத்தொகுப்பு

நாம் அதிலே, ஒரு நாகரீகம் அதனது வளர்ச்சிக்கு ஏற்ப்ப முதலாம் வகை, இரண்டாம் வகை அதன் பின்னர் மூன்றாம் வகை என்று வளர்ந்துகொண்டு செல்லும் எனப் பார்த்தோம். நாம், அதாவது மனித நாகரீகம் இப்போது இருப்பது “பூஜ்ஜிய” வகையில் என்பதும் ஒரு விடயம்! மேலே நான் கொடுத்திருக்கும் கட்டுரைகளை வாசித்தால் உங்களுக்கு தெரியவரும் ஒரு விடயம், இரண்டாம் வகை நாகரீகம், தனது உடுவில் (star) இருந்து வெளிவரும் அனைத்து சக்தியையும் பயன்படுத்தவல்லது என்று.

Continue reading “டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்”

வியாழனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் 5ஆவது கோள் வியாழனாகும். சூரியனில் இருந்து 778 மில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

  2. வியாழனில் ஒரு நாள் என்பது அண்ணளவாக வெறும் 10 மணித்தியாலங்களே. ஆனால் சூரியனைச் சுற்றிவர 12 பூமி வருடங்கள் எடுக்கிறது.

  3. வியாழன் ஒரு வாயு அரக்கனாகும். இதனால், பூமியில் இருப்பது போன்ற திடமான நிலப்பரப்பு, வியாழனில் இல்லை. ஆனால் வியாழனின் மையப்பகுதியில் பூமியளவு திண்மக்கோளம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  4. வியாழன், ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
  5. வியாழனின் அகப்பகுதியில் அமுக்கம் அதிகம் என்பதால், ஐதரசன் வாயு திரவநிலையில் அங்கு இருக்கிறது.

  6. வியாழனுக்கு 50 உறுதி செய்யப்பட்ட துணைக்கோள்களும், 17 இன்னமும் உறுதி செய்யப்படாத துணைக்கோள்களும் உண்டு.

  7. சனியைப் போல, வியாழனுக்கும் மிக மிக மெல்லிய வளையம் உண்டு. இது 1979 இல் வொயேஜர் விண்கலம் வியாழனுக்கு அருகில் செல்லும் போது கண்டுபிடிக்கப்பட்டது.

  8. வியாழனுக்கு பல விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜூனோ விண்கலம், 2016 இல் வியாழனைச் சென்றடையும்.

  9. வியாழனில், நாமறிந்து உயிர்வாழத் தேவையான காரணிகள் இல்லை. அனால் வியாழனின் சில துணைக்கோள்களில் உயிர் வாழத் தேவையான காரணியான நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  10. வியாழனின் மேற்பரப்பில் தெரியும் பெரிய சிவப்புப் புள்ளி ஒரு பாரிய புயலாகும். இந்தப் புயல், 3 பூமியை அதனுள் புதைக்கும் அளவிற்கு பெரியது. மற்றும், இது பலநூறு வருடங்களாக தொடர்ந்து வீசிக்கொண்டு இருக்கிறது.

செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.
  2. பூமியைப் போலவே, செவ்வாயும் தனது அச்சில் சுழல கிட்டத்தட்ட 24 மணிநேரங்கள் எடுக்கின்றது, ஆனால் சூரியனைச் சுற்றிவர 687 பூமி நாட்கள் எடுக்கின்றது.
  3. செவ்வாய் பூமியின் அளவில் பாதியளவு இருக்கும். இதன் விட்டம் 6778 கிலோமீற்றர்கள் ஆகும்.
  4. பூமியைப் போலவே செவ்வாயும் ஒரு பாறைக்கோளாகும். செவ்வாயின் மேற்பரப்பு, எரிமலை வெடிப்பு, விண்கற்களின் மோதல்கள் மற்றும், மேலோட்டு அசைவு, மற்றும் காலநிலை என்பனமூலம் மாற்றமடைந்துள்ளது.
  5. செவ்வாய்க்கு பூமியைவிட மெல்லிய வளிமண்டலம் உண்டு. அது பெரும்பாலும் காபனீர் ஒக்ஸ்சைடு, நைதரசன் மற்றும் ஆர்கன் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
  6. செவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள்கள் உண்டு. ஒன்று போபோஸ், மற்றயது டேய்மொஸ்.
  7. செவ்வாய்க்கு, சனியைபோல அதனைச் சுற்றி வளையங்கள் இல்லை.
  8. இதுவரை 40 இற்கும் மேற்பட்ட விண்கலங்கள், தரைஉளவிகள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாய்க்கு முதன் முதலில் வெற்றிகரமாக அனுப்பப்பட்ட விண்கலம் மாரினர் 4 ஆகும். இது 1965 இல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது.
  9. இப்போது இருக்கும் செவ்வாய், உயிர் வாழத் தேவையான காரணிகளைக் கொண்டு இல்லை. இறந்தகாலத்தில் செவ்வாயில் உயரினம் உருவாகத் தேவையான காலநிலை இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  10. செவ்வாய், சிவந்த கிரகம் என அழைக்கப்படக் காரணம், செவ்வாய் மணலில் இருக்கும் இரும்புக் கனிமங்கள் துருப்பிடிப்பததனால் ஆகும். மற்றும் செவ்வாயில் இருக்கும் பாரிய புயல்கள் இந்த துருபிடித்த தூசுகளை கோள் முழுவதும் காவிச்செல்கிறது.

பூமியைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனில் இருந்து மூன்றாவதாக இருக்கும் கோள். கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.

  2. பூமி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தியாலங்களும், சூரியனை ஒரு முறை சுற்றிவர 365 நாட்களும் எடுக்கிறது.

  3. புதன், வெள்ளியைப் போல பூமியும் ஒரு பாறைகளாலான கோளாகும். இதன் மேற்பரப்பில் மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள் என பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றன.

  4. மற்றைய எல்லாக் கோள்களைவிடவும், பூமி சற்று வித்தியாசமானது. இதன் மேற்பரப்பில் 70% நீரினால் மூடப்பட்டுள்ளது.

  5. பூமியின் வளிமண்டலம் 78% நைதரசனாலும், 21% ஒக்சீசனாலும், மற்றைய 1% ஏனைய வாயுக்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வாயு விகிதாசாரம், நாம் சுவாசிக்கத் தேவையான ஒரு வளிமண்டலத்தை உருவாகியுள்ளது.

  6. பூமிக்கு ஒரு துணைக்கோள் உண்டு – சந்திரன்.

  7. பூமியைச் சுற்றி எந்த வளையங்களும் (சனிக்குஇருப்பது போல) இல்லை.
  8. பூமி உயிர்வாழத் தகுதியான கோளாகும். நாமறிந்து உயிர்வாழத் தகுதியான கோள் இது மட்டுமே.

  9. பூமியின் வளிமண்டலம், வின்கற்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கிறது. பெரும்பாலான வின்கற்கள் வளிமண்டலத்திலேயே எரிந்து விடுகின்றன.

  10. பூமியில் உள்ள கண்டங்கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இது பூமியின் மற்பரப்பை வடிவமைப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

வெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்

  1. வெள்ளி, பூமியைவிட சிறிதளவே சிறியது. பூமியின் விட்டம் 12742 km, வெள்ளியின் விட்டம் 12104 km.

  2. சூரியனுக்கு அண்மையில் இருக்கும் இரண்டாவது கோள். இது சூரியனில் இருந்து 108 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

  3. வெள்ளியில் ஒரு நாள் என்பது, பூமியில் 243 நாட்களாகும். அதாவது வெள்ளி தன்னைத் தானே சுற்ற 243 பூமி நாட்கள் எடுக்கின்றது.

  4. வெள்ளி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 225 பூமி நாட்கள் எடுக்கின்றது.

  5. வெள்ளி ஒரு பாறைக்கோளாகும். இதனது மேற்பரப்பு, எரிமலை வெடிப்புக்களால் உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  6. வெள்ளியின், தடிப்பான வளிமண்டலம், காபனீர்ஒக்ஸைட், நைதரசன் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இதன் மேகங்கள், சல்பூரிக் அமிலத் துளிகளால் ஆக்கப்பட்டுள்ளது.

  7. வெள்ளிக்குத் துணைக்கோள்கள் இல்லை.

  8. இதுவரை வெள்ளியை கிட்டத்தட்ட 40 விண்கலங்கள் பார்வையிட்டுள்ளன. 1990 களில் சென்ற மெகல்லன் விண்கலம், வெள்ளியின் 98% ஆன மேற்பரப்பை கணக்கெடுத்தது.

  9. வெள்ளியின் மேற்பரப்பு வெப்பநிலை 480 பாகை செல்சியஸ். சூரியத்தொகுதியிலேயே அதிகளவான மேற்பரப்பு வெப்பநிலையை கொண்ட கோள் இது. இங்கு உயிர்கள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

  10. வெள்ளி மட்டுமே கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் ஒரே ஒரு கோளாகும். இங்கு சூரியன் மேற்கில் உதித்து, கிழக்கில் மறையும்.

புதனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியத்தொகுதியிலேயே மிகச் சிறிய கோள் புதன் – பூமியின் நிலவைவிட சற்றுப் பெரியது.

  2. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுவாகும் – சூரியனில் இருந்து அண்ணளவாக 58 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது.

  3. புதன், தனது அச்சில் ஒரு முறை சுற்றிவர 59 பூமி நாட்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை வெறும் 88 பூமி நாட்களில் சுற்றி வந்துவிடும்.

  4. புதன், பூமியைப் போல ஒரு திண்மக்கோளாகும்.

  5. புதனுக்கு மிக மிக மெல்லிய வளிமண்டலம் உண்டு. இது ஒக்சீசன், சோடியம், ஐதரசன், ஹீலியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.

  6. புதனுக்கு துணைக்கோள்கள் கிடையாது. புதனுக்கு, சனியைப் போல அதனைச் சுற்றி வளையங்கள் கிடையாது.

  7. புதனை இதுவரை 2 வின்கலங்களே சென்று ஆராய்ந்துள்ளன. 1974 இல் மரினர் 10 மற்றும் 2011 இல் மசென்ஜர்.

  8. புதனில் உயிர் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.

  9. பகல்வேளையில் மேற்பரப்பு வெப்பநிலை 430 பாகை செல்சியஸ் ஆகவும், இரவில் -180 பாகை செல்சியசாகவும் குறைவடைகின்றது.

  10. புதனில் இருந்து சூரியனைப் பார்த்தால், பூமியில் தெரிவதைவிட, சூரியன் மூன்று மடங்கு பெரிதாகத் தெரியும்.

மூலம்: நாசா

சூரியனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியன் ஒரு உடு. உடுக்கள் திண்ம மேற்பரப்பைக் கொண்டிருக்காது. இது முழுதும் வாயுக்களால் ஆனா ஒரு கோளவடிவப் பொருள். சூரியனில் 1% ஐதரசன், 7.8% ஹீலியம் காணப்படுகிறது.

  2. சூரியத்தொகுதியின் மையத்தில் இருக்கும் சூரியனில், சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99.8% ஆன திணிவைக் கொண்டுள்ளது.

  3. சூரியன் ஒரு வீட்டின் வாசல்க் கதவின் அளவிருந்தால், பூமி ஒரு பைசா நாணய அளவிருக்கும்.

  4. சூரியனுக்கு திடமான திண்ம உடல் இல்லாததால், சூரியனின் வேறு பகுதிகள், வேறு வேகத்தில் சுழல்கின்றான். சூரியன் தன்னைத் தானே சுற்ற, மத்தியில் 25 பூமி நாட்களும், துருவங்களில் 36 பூமி நாட்களும் எடுக்கின்றது.

  5. சூரியனது “வளிமண்டலத்திலேயே”, சூரியப் புள்ளிகள் (sun spots) மற்றும் சூரிய நடுக்கம் (solar flares) என்பன ஏற்படுகின்றன. சூரியனது வெளி வளிமண்டலமானது, ப்ளுட்டோவின் சுற்றுப் பாதைக்கும் வெளியில் செல்லும் அளவிற்கு பெரியது.

  6. சூரியனைச் சுற்றி, 8 கோள்களும் (planets), குறைந்தது 5 குறுங்கோள்களும் (dwarf planets), ஆயிரக்கணக்கான சிறுகோள்களும் (asteroids), லட்சக்கணக்கான வால்வெள்ளிகளும் சுற்றி வருகின்றன.

  7. சூரியனுக்கு எந்தவித வளையங்களும் (சனிக்கு இருப்பதைப் போல) கிடையாது.
  8. சூரியனது சக்தி இல்லாவிட்டால், பூமியில் உயிர் தோன்றி இருக்கவோ, அல்லது வாழவோ முடியாது.

  9. சூரியனது மேற்பரப்பு வெப்பநிலை அண்ணளவாக 5500 பாகை செல்சியஸ்.

  10. சூரியனது மையப் பகுதியில் வெப்பநிலை 15 மில்லியன் பாகை செல்சியஸ்.

மூலம்: நாசாவின் சூரியத்தொகுதிக்கான பக்கம்

பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம்

எழுதியது: சிறி சரவணா

இரவு நேர வானை நீங்கள் அவதானித்து இருந்தால், பல உடுக்களை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். ஒரு தெளிவான இரவு வானில், உங்களால் அண்ணளவாக 3000 தொடக்கம் 4000 வரையான உடுக்களை பார்க்கலாம். இந்த உடுக்கள் எல்லாம் எமது பால்வீதியில் இருப்பவைதான். கொஞ்சம் உன்னிப்பாக அவதானித்தால் அன்றோமீடா உடுப்பேரடையையும் வெறும் கண்ணால் பார்க்கலாமாம். அன்றோமீடா உடுப்பேரடை நமது பால்வீதியில் இருந்து கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. இதுதான் நமது பால்வீதிக்கு மிக அருகில் இருக்கும் உடுப்பேரடை.

இந்த இரவு வானம் ஒரு அற்புதமான விடயம், நீங்கள் இரவு வானில் பார்ப்பது வெறும் உடுக்கள் அல்லது பொருட்கள் மட்டுமல்ல, நேரத்தையும் தான். உண்மையிலேயே நீங்கள் பார்ப்பது ஒரு இறந்தகால வானத்தை. நமக்கு மிக அருகில் இருக்கும் புரோக்சிமா சென்ட்டரி என்னும் உடு, அண்ணளவாக 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அப்படியென்றால் இன்று நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது தெரியும் ப்ரோக்சிமா சென்ட்டரி உடு, 4.2 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம். ஏனென்றால் அங்கிருந்து ஒளி வந்தடைய 4.2 ஆண்டுகள் எடுக்கிறது.

Continue reading “பிரபஞ்சத்தின் எல்லையில் ஒரு புகைப்படம்”

சூரியத் தொகுதி: ஒரு அறிமுகம்

எழுதியது: சிறி சரவணா

சூரியத்தொகுதி என்பது, சூரியனையும், அதனைச் சுற்றி வரும், கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள், குறுங்கோள்கள், வான்கற்கள், வால்வெள்ளிகள் என்பனவற்றை கொண்ட ஒரு அமைப்பாகும். எமது சூரியத்தொகுதி, பால்வீதி எனப்படும், நட்சத்திரப்பேரடையில் இருக்கும் பில்லியன் கணக்கான நட்சத்திரத்தொகுதிகளில் ஒன்றாகும்.

சூரியத்தொகுதியில் மிக முக்கிய அம்சமாக இருப்பது, மையத்தில் இருக்கும் சூரியனும், அதனைச்சுற்றிவரும் 8 கோள்களுமாகும்.

சூரியத்தொகுதியைப் பொறுத்தவரை, சூரியனே மிகமுக்கியமான அமைப்பாகும். சூரியத்தொகுதியில் இருக்கும் மொத்தத் திணிவில் 99% ஆன திணிவை சூரியனே கொண்டுள்ளது. மற்றைய கோள்கள், குறுங்கோள்கள் ஏனைய பொருட்கள் எல்லாம் எஞ்சிய 1% திணிவிலேயே அடங்கிவிடும்.

Continue reading “சூரியத் தொகுதி: ஒரு அறிமுகம்”

கோள்கள்: ஒரு அறிமுகம்

எழுதியது: சிறி சரவணா

அறிவியல் என்பது ஒரு தொடர்ச்சியான மாறுதல்களுக்கு உட்பட்ட ஒரு செயன்முறை. அதில் கேள்வி கேட்டல், முன்கருத்தை உருவாக்குதல், கண்டறிதல், முன்னைய கருத்துக்களை புதுக்கண்டுபிடிப்புக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் என்று இந்தச் செயன்முறை தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். அறிவியல் கண்டுபிடிப்புக்களே, தர்க்கரீதியாக கண்டறிந்து அதனைப் பரிசோதனை செய்து அதிலிருந்து முடிவிகளைப் பெற்றே உருவாக்கப்படுகின்றன.

இப்போது விடயத்திற்கு வருவோம். இந்தப் பிரபஞ்சம் பற்றியும் அதனது தோற்றம் பற்றியும் நமது கருத்துக்கள், ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. புதிய உத்திகளைப் பயன்படுத்தி நாம் சேகரிக்கும் தரவுகள், எம்மைப் புதிய பாதையில் சிந்திக்கத் தூண்டுகின்றன. இப்படியான புதிய தரவுகள், நாம் பொருட்களை எப்படி வகைப்படுத்தியுள்ளோம் என்பதை மீண்டும் ஒரு முறை சிந்திக்கத் தூண்டுகிறது. புதிய கருத்துக்கள், அல்லது ஒரு பொருளை நாம் பார்க்கும் கோணம், ஒரு கோட்பாட்டை ஆராய்வதன் மூலம் உருவாகிறது.

Continue reading “கோள்கள்: ஒரு அறிமுகம்”

பிரபஞ்ச வரலாறு : தகவல்ப்படம்

ஐரோப்பிய விண்வெளிக் கழகம், அழகான, எளிமையாக வழங்கும் வண்ணம் பிரபஞ்ச வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளின் ஆரம்பக்கட்டங்களை தெளிவான தகவல்ப்படமாக தந்துள்ளது. பெருவெடிப்பில் தொடங்கி, அணுக்கள் உருவாகுவதில் இருந்து, நட்சத்திரங்கள், நட்சத்திரப் பேரடைகள் உருவாகுவது வரை மிகத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் 14 பில்லியன் வருட வரலாற்றின் சாரமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாது, பிரபஞ்ச நுண்ணலை பின்புலக் கதிர்வீச்சு எப்படி உருவாகியது என்றும் காட்டுகின்றது.

Continue reading “பிரபஞ்ச வரலாறு : தகவல்ப்படம்”

வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும்

எழுதியது: சிறி சரவணா

நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம் என்ற ஒன்றை வரைவிலக்கணப் படுத்தியுள்ளோம். சரி உயிரினம்  என்றால் என்ன என்று உயிரியல் எப்படி வரைவிலக்கணப் படுத்தியுள்ளது என்று பார்க்கலாம்.

எதோ ஒன்று உயிருள்ளது என்று கருத அது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உயிரியல் கூறுகிறது.

  1. ஒரு ஒழுங்கான கலக்கட்டமைப்பு கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். ஒரு கலமோ அல்லது பல கலங்கலாகவோ இருக்கலாம்.
  2. தன் நிலையைப் பேன சக்தியைப் பயன்படுத்துதல்
  3. சுவாசித்தல்
  4. இனப்பெருக்கப் செய்தல்
  5. வளர்ச்சியடைதல்
  6. வளர்சிதைமாற்றத்துக்கு உள்ளாதல்
  7. தூண்டல்களுக்கான துலங்கல்களைக் காட்டுதல்
  8. சூழலுக்கு ஏற்ப்ப இசைவாக்கம் அடைதல்
  9. அசைதல்
  10. கழிவகற்றல்

இதைபோல இன்னும் சில பண்புகளும் உண்டு, அதாவது கூர்ப்படைதல், தலைமுறைகளை உருவாக்குதல், மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்துதல் இப்படி பல இருந்தாலும், அடிப்படையாக உயிரினம் என்று ஒன்றை வகைப்படுத்த மேலே கூறியுள்ள பண்புகளை அது கொண்டிருக்கவேண்டும். இங்கு பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இந்த வகையான பண்புகளை காட்டுகின்றன.

Continue reading “வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும்”

சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் – தேடலுக்கு ஒரு புதிய இடம்

எழுதியது: சிறி சரவணா

சில வருடங்களுக்கு முன் நாசாவின் விண்கலமான கசினி, சனியின் துணைக்கோளான என்சிலாடசில் வெப்பநீர் இயக்கம் இருப்பதற்கான தடயத்தைக் கண்டறிந்தது. பூமியின் ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் மாற்றங்களைப் போல இந்தத் துணைக்கோளிலும் இடம்பெறும் மாற்றங்களை அவதானிக்கும் போது, வேறு கோள்களில், எப்படி இந்த மாற்றங்கள், அந்தக் கோள்களின் பௌதீக அமைப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்றும் அறியலாம்.

நாசாவின் விண்வெளிவீரர் ஜான் க்ரன்ஸ்பில்ட், இந்த என்சிலாடஸ் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்.

“என்சிலாடசில், கசினி கண்டறிந்த நீர் சார்ந்த செயற்பாடு, இந்தக் கோளின் மேற்பரப்புக்குக் கீழ் பெரிய கடல் இருப்பதற்கும், அங்குப் புவியியல் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கும், அதுமட்டுமல்லாது அங்கு உயிரினம் உருவாகத் தேவையான காரணிகளும் இருக்கலாம். இந்தச் சூரியத் தொகுதியில், உயிர் வாழவே முடியாது என்று கருதும் இடங்களில், இப்படியான செயற்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருப்பது, இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே தனியாகவா இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை அளிப்பதற்கான சந்தர்பத்தை உருவாகுகிறது”.

Continue reading “சனியின் துணைக்கோள் என்சிலாடஸ் – தேடலுக்கு ஒரு புதிய இடம்”

தமிழிலும் எழுதலாம் வாங்கோ!

இன்று ஒருங்குறி (unicode) பயன்பாடு அதிகரித்த பின், தமிழைக் கணனிகளில் பயன்படுத்துவது என்பது மிக மிக எளிதாக மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். முன்பொரு காலத்தில், தமிழ் இணையத்தளங்களைப் பார்வை இடுவதற்கே அந்தத் தளத்தில் இருந்து எழுத்துருவை பதிவிறக்க வேண்டிய நிலை இருந்தது. பின்பு இந்தத் தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு அதிகரித்த பின்னர், எல்லாத் தமிழ் தளங்களும் ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்த தொடங்கியவுடனும், இயங்கு முறைமைகளும், தமிழ் ஒருங்குறியை இயல்பாக ஆதரித்ததாலும் இந்தப் பிரச்சினை தீர்ந்தது.

வாசிக்க முடிந்தாலும், என்னைப் போன்றவர்களுக்குத் தமிழில் எழுதுவது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது என்றால் அது மிகையில்லை. ஆங்கில விசைப்பலகையில், தமிழில் எழுதுவதற்கு நிச்சயம் பயிற்சி வேண்டும். ஒரு அளவு வேகமாக ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யப் பழகியபின்னர், மீண்டும் தமிழில் ஸ்லோவாகத் தட்டச்சுச் செய்யப் பழகுவது என்பது மிகச் சிரமமான காரியம்! நான் அந்த முயற்ச்சியை கைவிட்டு விட்டேன்!

Continue reading “தமிழிலும் எழுதலாம் வாங்கோ!”

செயற்கை நுண்ணறிவு 4 – பிரிவுகள்

எழுதியது: சிறி சரவணா

செயற்கை அறிவு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டாலும், அதில் பல பிரிவுகளை இன்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருந்தும், செயற்கை அறிவில் இருக்கவேண்டிய எல்லாத் துணைப் பிரிவுகளையும் அறிந்துவிட்டனரா என்றால், இல்லை என்றே சொல்லவேண்டும். அப்படி அறியப்பட்ட பிரிவுகளிலும் சில பிரிவுகளை எம்மால் மிகத்தெளிவாக ஆராய முடிந்துள்ளத்து. மற்றும் சில பிரிவுகளை அவ்வளவு இலகுவாக ஆராய முடியவில்லை.

நமக்குத் தெரிந்த அப்படியான சில பிரிவுகளை இங்குப் பார்க்கலாம்.த இதில் நான் மேலோட்டமாக இந்தப் பிரிவுகளின் பண்புகளைச் சொல்லிவிடுகிறேன். பின்னர் வரும் பகுதிகளில் நாம் பல்வேறுபட்ட AI முறைகளைப் பற்றிப் பார்க்கும் போது இந்தப் பிரிவுகளில் உள்ளவற்றை எவ்வாறு இந்த AI பயன்படுத்திக்கொள்கிறது என்று தெளிவாகப் பார்க்கலாம்.

Continue reading “செயற்கை நுண்ணறிவு 4 – பிரிவுகள்”

கிளவுட் சேமிப்பும், சேவை வழங்குனர்களும் ஒரு பார்வை

இன்று கணணியைப் பாவிப்பதில் நமது அளவு அதிகரித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதற்கேற்ப கணனியில் நாம் சேமித்து வைத்திருக்கும் கோப்புக்களின் அளவும் அதிகரித்துள்ளது. நான் முதன் முதலில் கணணியைப் பார்த்தது 1995 இக்கு பிறகுதான், அண்ணனுக்காக கொண்டுவரப்பட்ட கணனியில் இருந்த ஹர்ட்டிஸ்க்கின் கொள்ளளவு வெறும் 350MB தான். பிறகு அது பழுதாகவும், புதிதாக வாங்கிய ஹர்ட்டிஸ்க் 2.5GB! அது அந்தக் காலம்.

இன்று நாம் பயன்படுத்தும் ஹர்ட்டிஸ்க்களின் அளவு டெர்ராபைட் அளவுகளில் அதாவது ஆயிரக்கணக்கான Gigabyte அளவுகளில் கிடைகிறது. இருந்தும் நம் தேவை அதையும் தாண்டி இருக்கிறது.

இனைய வளர்ச்சியில் இடம்பெற்ற பல்வேறு விடயங்களில் இந்த கிளவுட் சேமிப்பும் ஒரு முக்கியமான அங்கமாகிவிட்டது. அதாவது நமது கணனியில் தகவல்களை சேமித்து வைப்பதைப் போல, நாம் வேறொரு இடத்தில் அந்த தகவல்களை சேமித்து வைத்து, இணையத்தின் மூலம் அதனை பயன்படுத்திக்கொள்ளும் முறை இந்த கிளவுட் சேமிப்பு. இதில் பல நன்மைகளும் உண்டு அதேபோல சில பல தீமைகளும் உண்டு.

Continue reading “கிளவுட் சேமிப்பும், சேவை வழங்குனர்களும் ஒரு பார்வை”

பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்

எழுதியது: சிறி சரவணா

நம் பிரபஞ்சம் உருவாகி கிட்டத்தட்ட 13.8 பில்லியன் வருடங்கள் ஆகின்றன என்று தற்போது விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த நம்பர் எங்கிருந்து வந்து என்றால், எல்லாம் ஐன்ஸ்டின் வித்திட்டது தான், அவரது பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து செயப்பட்ட கணிப்புக்களே இந்த 13.8 பில்லியன் வருடங்கள் என்ற வரையரைக்குக் காரணம்.

அப்படியென்றால் அந்த 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன் என்ன இருந்தது? இந்தப் பிரபஞ்சம் அப்போது எங்கே இருந்தது என்று கேள்விகள் எழும்பலாம் தானே? நிச்சயம். நீங்கள் பெருவெடிப்பு (Big Bang) என்று கேள்விப்பட்டிருக்கலாம். அதாவது இந்த பிரபஞ்சமானது 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகச்சிறிய புள்ளியளவு இருந்ததாக இயற்பியலாளர்கள் கருதுகின்றனர், அதை ஒருமைப்புள்ளி (singularity) என்று அழைகின்றனர். இந்த ஒருமைப்புள்ளி அளவு இருந்தபோது, பிரபஞ்சம் மிக மிக வெப்பமானதாகவும், அளவில் அனுத்துனிக்கைகளை விட சிறிதாகவும் இருந்தது.

Continue reading “பிரபஞ்சத்தின் ரகசியமும், இயற்பியல் சிக்கல்களும்”

செவ்வாயில் கடலா?

செவ்வாய்க் கோளில் கடல் இருந்ததற்கு அடையாளம் இருப்பதாக NASA மற்றும் ESO ஆய்வாளர்கள் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதாவது செவ்வாயில் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு அதனது வட அரைகோளத்தில் பாதியளவு இந்த கடல் இருந்ததாம். அண்ணளவாக முழுச் செவ்வாயையும் 140 மீற்றர் அளவு ஆழத்திற்கு நிரப்பக்கூடியளவு நீர். இப்போது இல்லை, பெரும்பாலும் எல்லாம் விண்வெளிக்கு போய்விட்டது. செவ்வாய் இப்போது ஒரு பாலைவனம் தான்.

Continue reading “செவ்வாயில் கடலா?”

செயற்கை நுண்ணறிவு 3 – முற்றுமையில்லாக் கோட்பாடு

செயற்கை நுண்ணறிவின் அறிவியல் ரீதியான ஆரம்பம் 1900 களுக்கு பின்பே ஆரம்பித்தது என்று சொல்லாம். ஆனாலும் செயற்கை நுண்ணறிவைப் பற்றி சிந்திக்க முதல், தர்க்கவியல் (logic) என்ற ஒன்றைப் பற்றி அதிகமாகவே அறிவியலாளர்கள் சிந்தித்து இருகின்றனர்.

கணிதம் என்ற ஒன்று மனிதனின் கண்டுபிடிப்பில் மிக மிக முக்கியமானது. இயற்கையில் நடைபெறும் அனைத்து விந்தைகளையும் இயற்பியல், கணித சமன்பாடுகளாக தந்துவிடுகிறதே. இயற்பியலின் அடிப்படையே இந்த கணிதம் தான் என்றால் மிகையில்லை. நியூட்டனின் கால்குலஸ் உருவாக்கத்திற்கு பிறகு, இயற்க்கை விதிகளை கணிதத்தால் கணக்கிட முடிந்தது. கணிதவியலாலர்களும், இயற்பியலாளர்களும் கணிதத்தால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று ஒன்று இல்லை என்றே நம்பினார்.

Continue reading “செயற்கை நுண்ணறிவு 3 – முற்றுமையில்லாக் கோட்பாடு”