நடுவில் ஒரு அரக்கன்

இந்தப் பிரபஞ்சம் பெரும்பாலும் வெறுமையானதுதான். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன், அண்ணளவாக 40 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. நாம் தற்போது வைத்திருக்கும் மிக வேகமாகச் செல்லக்கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கு செல்லவேண்டுமென்றாலும் கிட்டத்தட்ட 80,000 வருடங்கள் எடுக்கும். ஆகவே தொலைவில் இருக்கும் விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகள் என்பவற்றை அடைய பல மில்லியன் வருடங்கள் எடுக்கும்.

Continue reading “நடுவில் ஒரு அரக்கன்”

செவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்

எழுதியது: சிறி சரவணா

செவ்வாயில் நீர் உறைந்த நிலையில் இருப்பதை நீண்டகாலமாக நாம் அறிவோம், ஆனால் நேற்று நாசா வெளியிட்ட புதிய ஆய்வு முடிவுகள், செவ்வாயின் மேற்பரப்பில் நீர் திரவமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

நாசாவின் Mars Reconnaissance Orbiter (MRO) என்ற விண்கலத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவை நாசா வெளியிட்டுள்ளது.

Continue reading “செவ்வாயின் மேற்பரப்பில் நீர் – நாசாவின் புதிய முடிவுகள்”

தெற்கு வானின் ஆவிகள்

இந்தப் படத்தில் தெரியும் அழகான குமிழி போன்ற அமைப்பு ஒரு ஒளிரும் விண்மீனின் ஆவியாகும்! விண்மீன்கள் இறந்தபின் ஆவிகளாகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தப் படத்தில் இருக்கும் குமிழி போன்ற அமைப்பு முன்பு ஒரு காலத்தில் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனாக இருந்தது. தற்போது இது வெறும் ஆவி! இந்த விண்மீன்களின் ஆவிகள், கோள்விண்மீன் படலங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை இறந்த விண்மீன்களின் எச்சங்களில் இருந்து உருவாகின்றன.

Continue reading “தெற்கு வானின் ஆவிகள்”

ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்

எழுதியது: சிறி சரவணா

நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்ததுண்டா? அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா? மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும்! இந்தப் பிரபஞ்சத்திலும் இப்படியான ஒரு செயற்பாடு நடந்துள்ளது – இந்தப் பிரபஞ்சம் இளமையாக இருக்கும்போது.

Continue reading “ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்”

பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்

எழுதியது: சிறி சரவணா

ஒரு விண்மீன் பேரடை என்பது, மிக அதிகமான விண்மீன்களின் தொகுதியாகும். இந்தப் பேரடைகள் பல மில்லியன் தொடக்கம் பில்லியன் கணக்கான விண்மீன்கள், விண்வெளித்தூசு மற்றும் வேறு பல வான்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு ஆகும்.

Continue reading “பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்”

பிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி!

எழுதியது: சிறி சரவணா

பொதுவாக எல்லோருக்கும் கண்ணாடி பார்க்கும் பழக்கம் இருக்கும். பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் “முகம்பார்க்கும் கண்ணாடி” எந்தவித மாற்றமுமின்றி அப்படியே நமது பிம்பத்தைப் பிரதிபலிக்கும். ஆனால் நீங்கள் வாகனங்களின் இரு புறங்களில் இருக்கும் கண்ணாடிகளைப் பார்த்ததுண்டா? குவிவாடி என்று அழைக்கப்படும் இவை, சற்று மேல்நோக்கி வளைந்த ஆடிகள் (கண்ணாடிக்காண அறிவியல் பதம்), வளைவில்லாத முகம்பார்க்கும் கண்ணாடிகளைப் போல அன்றி, அதைவிட அதிகளவு வீச்சுக் கொண்ட பிம்பங்களை அதானல் தோற்றுவிக்க முடியும். வாகனங்களில் இதைப் பயன்படுத்தும் நோக்கம், பின்னால் வரும் வாகனங்களை இலகுவாக அவதானிப்பதற்கு ஆகும்.

Continue reading “பிரபஞ்ச வில்லைகள் – இயற்கையின் பூதக்கண்ணாடி!”

உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு

எழுதியது: சிறி சரவணா

நீங்கள் லெகோ கட்டிகளை வைத்துப் பல சிறிய பொருட்களை உருவாக்கியிருப்பீர்கள். உதாரணமாக சிறிய வீடு, பாலம், கார் என்பன. சிலர் முழு அளவுகொண்ட வீடுகள், ராக்கெட்கள், அதையும் தாண்டி முழுஅளவிலான கப்பல்கள் என்பனவற்றையும் உருவாக்கியுள்ளனர். இப்படியான வியக்கத்தக்க லெகோ கட்டமைப்புகளைப்போலவே, மனிதனும், நுண்ணிய பகுதிகள் பல சேர்ந்தே உருவாக்கப்பட்டிருக்கிறான். மனிதனின் இந்த அடிப்படைக் கட்டமைப்பு சேதன மூலக்கூறுகள் (organic molecules) எனப்படுகின்றன.

லெகோ கட்டிகளைப் போலல்லாமல், மூலக்கூறுகள் மிக மிகச் சிறியவை. அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகச் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளைக் கொண்டு மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். இந்த சேதன மூலக்கூறுகள், கார்பன், ஹைட்ரோஜன், மற்றும் ஒக்சீசன் போன்ற மூலகங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இப்படியான சேதன மூலக்கூறுகள் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும் காணப்படுகின்றன.

Continue reading “உயிரின் அடிப்படைக் கட்டமைப்பு”

பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்

எழுதியது: சிறி சரவணா

பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெருவெடிப்பு, ஒரு அசாத்திய நிகழ்வு. மிக மிக சக்திவாய்ந்த, மிகப்பிரகாசமான ஒரு வெடிப்பாக அது இருந்தது. அவ்வளவு பெரிதாக அது வெடித்திருப்பினும், இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பெரும்பாலும் ஒரு நுட்பமான அம்சமாகவே இருக்கிறது.

பெருவெடிப்பின் பின்னர், நீண்ட காலத்திற்கு இந்தப் பிரபஞ்சம் இருளிலேயே இருந்தது, அங்கே விண்மீன்கள் இல்லை, ஒளியில்லை. அந்த ஆரம்பக்காலப் பிரபஞ்சம், இருண்ட, சத்தமற்ற ஒரு வெறுமையாக இருந்தது. இந்தப் பிரபஞ்சம் தோன்றி அதில் முதல் விண்மீன்கள் உருவாக அண்ணளவாக 100 மில்லியன் வருடங்கள் எடுத்து! அதுவரை பிரபஞ்சத்தில் இருந்ததெல்லாம் வெறும் வாயுக்கள் மட்டுமே.

Continue reading “பிரபஞ்சத்தின் முதல் விண்மீன்கள்”

84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்

எழுதியது: சிறி சரவணா

இந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கருவி (கமெரா – camera), நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் டிஜிட்டல் கமெராக்களை வெறும் விளையாட்டுப் பொருளாக நினைக்கும் அளவிற்கு  துல்லியத்தன்மை வாய்ந்தது!

நாம் டிஜிட்டல் கமெராக்களை (digital camera) வாங்கும் போது, பொதுவாக அதன் தரத்தை “மெகாபிக்ஸல்” மூலம் அளப்போம். அதாவது “மெகாபிக்ஸல்” அதிகரிக்க அதிகரிக்க, கமெராவின் மூலம் எடுக்கப்படும் படத்தின் தரமும் அதிகரிக்கும். பொதுவாக நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் கமெராக்களின் சராசரி மெகாபிக்ஸல் அளவு அண்ணளவாக 10 மெகாபிக்ஸல்கள். ஆனால் இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் புகைப்படத்தை எடுத்த, அந்தத் தொலைக்காட்டியில் இணைக்கப்பட்டிருந்த கமெராவில் 9000 மெகாபிக்ஸல்கள் இருந்தது! அப்படியென்றால் அது எவ்வளவு துல்லியமாக அந்தப் படத்தை எடுத்திருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Continue reading “84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்”

கோள்விண்மீன் படலங்கள்

எழுதியது : சிறி சரவணா

சூரியனைப் போன்ற விண்மீன்கள், தங்கள் எரிபொருளான ஹைட்ரோஜனை முடித்துவிட்டால், அதன் பின்னர் அவை தனது அமைப்பைப் பேண முடிவதில்லை, இவை சிவப்பு அரக்கனாக (red giant) மாறி பல நூறு மடங்கு பெரிதாகும், இந்த நிலையில் விண்மீன்கள், தங்கள் வெளிப்புற படலத்தை அப்படியே வெளி நோக்கி வீசி விடும், எஞ்சிய அடர்த்தியான மையப்பகுதி இறுதியில் வெள்ளைக்குள்ளனாக (white dwarf) மாறிவிடும். இதுதான் நமது சூரியனது எதிர்காலமும்.

இப்படி வீசி எறியப்பட்ட வெளிப் படலம், பல்வேறுபட்ட வடிவங்களையும் நிறங்களையும் பெற்றுக்கொள்ளும். மையப்பகுதியில் இருக்கும் அடத்தியான மற்றும் வெப்பமான வெள்ளைக்குள்ளனில் இருந்து வெளிவரும் வேகமான கதிர்வீச்சுப் புயல், இந்த வெளிப் படலத்தை தொடர்ந்து வெளிநோக்கி தள்ளிக்கொண்டே இருக்கும்.  இவையே கோள்விண்மீன் படலம் (planetary nebula) எனப்படுகிறது.

Continue reading “கோள்விண்மீன் படலங்கள்”

சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை

எழுதியது: சிறி சரவணா

விண்மீன் பேரடைகள் பொதுவாக பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்டிருக்கும், நமது பால்வீதியிலேயே அண்ணளவாக 200 பில்லியன் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் நமது பால்வீதி ஒன்றும் அப்படி பெரிய விண்மீன் பேரடை அல்ல. ஒவ்வொரு விண்மீன் பேரடைக்கும் ஒவ்வொரு பிரகாசம் உண்டு, அது அந்தப் பேரடையில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை மற்றும் சக்தியைப் பொறுத்து வேறுபாடும். உதாரணமாக, அதிகளவான விண்மீன்கள் குறித்த பேரடையில் இருந்தால், அதன் பிரகாசம் அதிகமாக இருக்கும்.

WISE தொலைக்காட்டியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் தற்போது, இதுவரை நாம் கண்டறிந்த விண்மீன் பேரடைகளிலேயே மிகவும் பிரகாசமான பேரடையைக் கண்டறிந்துள்ளனர். இந்த WISE தொலைக்காட்டி, சாதாரண தொலைக்காட்டிகளைப் போல கட்புலனாகும் ஒளிக்கற்றை வீச்சைப் (visible light) பயன்படுத்தாமல், அகச்சிவப்பு கற்றை வீச்சில் (infrared spectrum) படம்பிடிக்கும் ஒரு தொலைக்காட்டியாகும்.

Continue reading “சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை”

100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்

எழுதியது: சிறி சரவணா

விண்ணியல் ஆய்வாளர்கள், வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான அடையாளம் உண்டா என அண்ணளவாக 100,000 விண்மீன்பேரடைகளில் தேடியுள்ளனர். இதுவரை “எதிர்பார்த்த” முடிவு கிடைக்கவில்லை. அதாவது  வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான எந்தவொரு தடயமும் இன்னும் கிடைக்கவில்லை. நாசாவின் வைஸ் (WISE) என்ற செயற்கைக்கோளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வாளர்கள் இந்த 100,000 பேரடைகளை ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஒரு விண்மீன் பேரடையில் உள்ள விண்மீன்கள் வேற்றுலகவாசிகளால் குடியேற்றப்பட்டிருந்தால், அந்த சமுதாயத்தின் தொழில்நுட்ப பாவனையினால் வெளியிடப்படும் விரயமான சக்தி, அகச்சிவப்பு கதிர்வீச்சாக வெளியிடப்படும், இந்தக் கதிர்வீச்சை கண்டறியும் வண்ணமே வைஸ் செய்மதி உருவாக்கப்பட்டுள்ளது.

Continue reading “100,000 விண்மீன்பேரடைகளில் வேற்றுலகவாசிகளைத் தேடல்”

விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி

எழுதியது: சிறி சரவணா

நாசா வெற்றிகரமாக தனது புதிய விண்கல எஞ்சின் – EM டிரைவ் ஐ பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. அதாவது, EM டிரைவ் எனப்படும், மின்காந்தவிசை உந்துகைச் செலுத்தியில், காற்றில்லா வெற்றிடத்தினுள் வைத்து அது வெற்றிகரமாக இயங்குவதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியிலும் வெற்றிடம் இருப்பதால், இந்த EM Drive, இனி வரும் காலங்களில் ராக்கெட் என்ஜின்களுக்கு பதிலாக, விண்கலங்களில் பயன்படுத்தப்படலாம்.

இந்த EM Drive ஐ பயன்படுத்தி, வெறும் 70 நாட்களிலேயே செவ்வாய்க்கு சென்றுவிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த EM Drive எதிர்காலத்தில் விண்வெளிப் பயணத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

Continue reading “விண்வெளிப் பயணத்தில் ஒரு புதிய முயற்சி: நாசாவின் ஈ.எம் செலுத்தி”

வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்

எழுதியது: சிறி சரவணா

கடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் புரிந்த சாதனைகள், மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து நாம் செய்த சாதனைகளை எல்லாம் விட அதிகமானது. அதில் மிக முக்கியமான சாதனையாக மனிதனின் விண்வெளிப் பயணத்தைக் குறிப்பிடலாம். அதிலும், 400,000 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் நிலவில் சென்று காலடிவைத்து, அங்கே வடை சுட்ட பாட்டியை தேடியது மனிதனின் சாதனைகளுக்குள் ஒரு சிகரம் என்றே சொல்லவேண்டும்.

1960 களின் பின்னர் விண்வெளிப் பயணம் என்பது சாத்தியமாகிவிட, மனிதனுக்கு சூரியத்தொகுதியை ஆராய ஒரு புதிய வழி கிடைத்தது. அதுவரை, தொலைக்காட்டிகள் மூலம் மட்டுமே மற்றைய கோள்களையும் அதன் துணைக்கோள்களையும் பற்றி அறிந்த மனிதன், இப்போது வான்வெளிப் பொருட்களை நோக்கி விண்கலங்களை செலுத்தக்கூடியளவு தொழில்நுட்பத்தில் வளர்ந்துவிட, அதை சாதகமாகக்கொண்டு நமது சூரியத்தொகுதியில் உள்ள கோள்களை ஆராய ஒரு புதிய திட்டம் உருவானது.

Continue reading “வொயேஜர் – சூரியத்தொகுதியைத் தாண்டி இரு பயணங்கள்”

மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்

எழுதியது: சிறி சரவணா

2004 இல் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட மெசெஞ்சர் (MESSENGER) விண்கலம் புதனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட ரோபோ விண்கலமாகும். புதனை சுற்றிவந்து ஆய்வு செய்த முதலாவது விண்கலமும் இதுதான். 485 kg எடை கொண்ட மெசெஞ்சர், 2011 இல் புதனை சுற்றத்தொடங்கியது. புதனைப் பற்றிய பல்வேறு அதிசயிக்கத் தக்க தகவல்களை இது நமக்கு தெரிவித்தது.

இன்னும் சில நாட்களில் மெசெஞ்சர் விண்கலம் தனது பத்து வருட பயணத்தை முடிக்கப்போகிறது. ஆம், அது புதனோடு சென்று மோதப்போகிறது. இதுவும் அதனது ஆய்வுத்திட்டத்தில் ஒரு பகுதிதான். ஏப்ரல் 30 அளவில் செக்கனுக்கு 3.91 கிலோமீட்டர் வேகத்தில் அது புதனோடு மோதும். அது புதனில் வளிமண்டலத்தில் நுழையும் போது சேகரிக்கும் தகவல்களையும், அது மோதும் வரை கிடைக்கும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பிவிட்டே அது தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

Continue reading “மெசஞ்சர் விண்கலத்தின் முடிவும், புதனைப் பற்றி நாமறிந்த தகவல்களும்”

சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி?

எழுதியது: சிறி சரவணா

ஏன், எதற்கு & எப்படி என்ற பகுதியில் இன்று நாம் பார்க்கவிருப்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு சமாச்சாரம் தான் – சூரிய கிரகணம். பெரும்பாலும் நமக்கு இது என்ன என்று தெரிந்திருக்கலாம், இருந்தாலும் அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக, விரிவாகப் பார்க்கலாம்.

சூரியகிரகணம் என்பது சூரியனது ஒளியை நமது பூமியின் சந்திரன் மறைக்கும் போது ஏற்படும் ஒரு நிகழ்வு என்று இலகுவாக வரையறுக்கலாம். ஆனாலும் இதில் கவனிக்க வேண்டிய சில பல விடயங்கள் இருக்கின்றன. சூரியன், சந்திரனோடு ஒப்பிடும் போது மிக மிகப் பெரியது. சூரியனது ஆரை – 695,800 km, அனால் சந்திரனது ஆரையோ வெறும் 1738 km தான். ஆக சூரியன், சந்திரனைப் போல 400 மடங்கு பெரியது. அதேபோல இன்னொரு விடயம், சூரியனுக்கும் நமது பூமிக்கும் இடையில் இருக்கும் தூரத்தைப் போல அண்ணளவாக 400 மடங்கு அருகில் சந்திரன் இருக்கிறது! இப்படியான இயற்கையின் அதிஷ்டவசமான காரணிகள், இந்த சூரியகிரகணம் என்ற ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்தியுள்ளது. உண்மையிலேயே இது ஒரு இயற்கையில் நடந்த விபத்து! Continue reading “சூரியகிரகணம் – ஏன், எதற்கு & எப்படி?”

நெப்டியுனைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது.

  2. நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி வருடங்கள் எடுக்கிறது.

  3. யுரேனசைப் போல நெப்டியுனும் ஒரு ‘பனி’ அரக்கனாகும். இது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மெதேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.

  4. நெப்டியுனின் மையப்பகுதியில் பூமியளவுள்ள பாறைக்கோளம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  5. நெப்டியுனின் வளிமண்டலம், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகிய வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.

  6. நெப்டியுனுக்கு 13 உறுதிசெய்யப்பட்ட துணைக்கோள்கள் உண்டு. இவற்றுக்கு, கிரேக்க நீர்க் கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.

  7. நேப்டியுனுக்கும் சனியைப் போலவே அதனைச் சுற்றி ஆறு வளையங்கள் உண்டு.
  8. யுரேனசைப் போலவே, நெப்டியுனுக்கும் அருகில் சென்ற ஒரே விண்கலம் வொயேஜர் 2 மட்டுமே.

  9. நெப்டியுனில் நாமறிந்த உயிர் வாழத் தேவையான காரணிகள் இல்லை.

  10. புளுட்டோ, சூரியனில் இருந்து நெப்டியுனைவிட மிகத் தொலைவில் சுற்றினாலும், சில வேலைகளில், அது நேப்டியுனை விட சூரியனுக்கு அருகில் செல்கிறது, இதற்கு காரணம், புளுட்டோவின் நீள்வட்டப் பாதையே.

யுரேனசைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் 7வது கோள் யுரேனஸ் ஆகும். இது சூரியனை 2.9 பில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சுற்றி வருகிறது. (19.19 AU)

  2. யுரேனசில் ஒரு நாள் என்பது 17 மணித்தியாலங்கள் ஆகும். அதேபோல சூரியனை ஒரு முறை சுற்றிவர 84 வருடங்கள் எடுக்கின்றது.

  3. இது ஒரு ‘பனி அரக்கன்’ வகைக் கோளாகும். அதாவது இந்தக் கோளானது ‘பனி’யால் ஆன மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நீர், மெதேன் மற்றும் அமோனியா.

  4. பாறையால் ஆனா சிறு மையப்பகுதி, யுரேனசுக்கு உண்டு.

  5. யுரேனசின் வளிமண்டலம் பெரும்பாலும் ஐதரசன், ஹீலியம் மற்றும் சிறிதளவு மெதேன் வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.

  6. யுரேனசுக்கு 27 துணைக்கோள்கள் உண்டு. இவற்றின் பெயர்கள், வில்லியம் ஷேக்ஸ்பியர், மற்றும் அலக்ஸாண்டர் போப் எழுதிய கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களாகும்.

  7. யுரேனசுக்கும் சிறிய, மெல்லிய வளையங்கள் உண்டு.
  8. இதுவரை யுரேனசுக்கு அருகில் சென்ற ஒரே விண்கலம் வொயேஜர் 2 மட்டுமேயாகும்.

  9. யுரேனசில், நாமறிந்து உயிர் வாழத்தேவையான காரணிகள் எதுவும் இல்லை.

  10. வெள்ளிக் கோளைப் போல, கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் மற்றைய ஒரே கோள் இந்த யுரேனஸ், ஆனாலும் இது மற்றைய கோள்களைப் போல நிலைக்குத்தாக சுழலாமல், கிடையாக சுழல்கிறது.

சனியைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் ஆறாவது கோள் சனியாகும். சூரியனில் இருந்து அண்ணளவாக 1.4 பில்லியன் கிலோமீற்றர்கள் (9.5 AU) தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.

  2. சனி தன்னைத்தானே சுற்ற 10.7 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 29 பூமி ஆண்டுகள் எடுக்கிறது.

  3. வியாழனைப்போல சனியும் ஒரு வாயு அரக்கனாகும். பாறைகளால் ஆன மேற்பரப்பு அற்ற வெறும் வாயுக்கோள்.

  4. சனியின் மேற்பரப்பு ஐதரசன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. சனியின் மையப்பகுதியில் வியாழனைப்போலவே பாறையால் ஆன கோளம் ஒன்று இருக்ககூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  5. சனிக்கு உறுதிசெய்யப்பட்ட 53 துணைக்கோள்களும், உறுதிசெய்யப்படாத 9 துணைக்கோள்களும் உண்டு.

  6. சூரியத்தொகுதியிலேயே மிக அழகான, பெரிய வளையங்களைக் கொண்டுள்ள கோள் சனி மட்டுமே. இந்த வளையங்களில் பல்வேறு பிரிவுகளும், இடைவெளிகளும் இருக்கின்றன.

  7. சனியின் வளையங்கள், பனிக்கட்டித் துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வளையங்களின் சராசரித் தடிப்பு வெறும் 10 மீட்டர்கள்தான்.

  8. சனிக்கு இதுவரை 5 விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2004 இல் இருந்து, கசினி விண்கலம், சனியையும், அதன் வளையங்கள் மற்றும் துணைக்கோள்களை ஆராய்ந்துவருகிறது.

  9. நாமறிந்து சனியில் உயிர்வாழத்தேவையான காரணிகள் இல்லை. அனால் சில சனியின் துணைக்கோள்களில் திரவமாக நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அங்கு உயிர் தோன்றுவதற்கான காரணியாக இருக்கலாம்.

  10. சனியின் காந்தப்புலமானது பூமியின் காந்தப்புலத்தைப் போல 578 அதிகமானது.

டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்

எழுதியது: சிறி சரவணா

அறிவியல் ரீதியாக மனிதன் வளர வளர, அவனது கைக்கு எட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாம் முன்பு ஒருமுறை, வேற்றுக்கிரக நாகரீகங்கள் என்ற பகுதியில் ஒரு நாகரீகமானது எவ்வாறு வளர்சியடைத்து செல்லலாம் என்று பார்த்தோம். அந்தக் கட்டுரைகளை கீழுள்ள இணைப்பின் மூலம் வாசித்துக் கொள்ளுங்கள்.

வேற்றுக்கிரக நாகரீகங்கள் – கட்டுரைத்தொகுப்பு

நாம் அதிலே, ஒரு நாகரீகம் அதனது வளர்ச்சிக்கு ஏற்ப்ப முதலாம் வகை, இரண்டாம் வகை அதன் பின்னர் மூன்றாம் வகை என்று வளர்ந்துகொண்டு செல்லும் எனப் பார்த்தோம். நாம், அதாவது மனித நாகரீகம் இப்போது இருப்பது “பூஜ்ஜிய” வகையில் என்பதும் ஒரு விடயம்! மேலே நான் கொடுத்திருக்கும் கட்டுரைகளை வாசித்தால் உங்களுக்கு தெரியவரும் ஒரு விடயம், இரண்டாம் வகை நாகரீகம், தனது உடுவில் (star) இருந்து வெளிவரும் அனைத்து சக்தியையும் பயன்படுத்தவல்லது என்று.

Continue reading “டைசன் கோளம் – விண்வெளியில் ஒரு மெகா கட்டுமானம்”