இன்று கணணி உலகில் இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று வைரஸ். பொதுவாக வைரஸ் என்று எல்லோராலும் அறியப்பட்டாலும், கணணி வைரஸ் என்பது, மல்வெயர் (malware) எனப்படும் தீங்கு விளைவிக்கும் கணணி மென்பொருள்களில் இருக்கும் ஒரு வகை மட்டுமே. மல்வெயார்கள் பலவகளைப் படுகின்றன. கணணி வைரஸ் தவிர்த்து, வோர்ம், ட்ரோஜான் ஹோர்ஸ், ransomware, adware, spyware, scareware, rootkit இப்படி பல தினுசுகளில் இவை கிடைகின்றன! Continue reading “ஆன்டிவைரஸ் மட்டும் போதுமா?”
குறிச்சொல்: featured
இந்தப் பிரபஞ்சம் எரிக்கும் விண்மீன்கள், தீங்குவிளைவிக்கும் பிரபஞ்சக் கதிர்வீச்சு மற்றும் பறக்கும் பாரிய கற்கள் என்பனவற்றைக் கொண்ட ஆபத்தான இடம். ஆனால் பயப்பட வேண்டாம், பூமி, சூரியத் தொகுதியில் இருக்கும் ஒரு பாதுகாப்பான கோட்டை. இயற்கையாகவே அமைந்த பல அடுக்கான பாதுகாப்பு அரண்களைக் கொண்டு உயிர்களை இது பாதுகாக்கிறது. இப்படியான பாதுகாப்பு அரண்களில் முக்கியமான ஒன்று பூமியின் காந்தப்புலம். Continue reading “காந்தங்கள் கொண்டு பூமியின் உள்ளே பார்க்கலாம்”
MIT ஐ சேர்ந்த உயிரியல் பொறியியலாளர்கள் செல் ஒன்றின் பண்பை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக் கூடிய ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மொழி மூலம் DNA சார்ந்த சுற்றுக்களை உருவாக்கி அதனைக் கொண்டு செல்களுக்கு புதிய தொழிற்பாடுகளை புகட்டமுடியும். Continue reading “உயிருள்ள செல்களை கட்டுப்படுத்த ஒரு ப்ரோக்ராம்மிங் மொழி”
சூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர் என்பது அரிதாகக் காணப்படும் ஒரு வஸ்து என்றே கூறிவிடலாம். காரணம் அவ்வளவுக்கு அதிகளவான நீரை இந்தத் துணைக்கோள்கள் கொண்டுள்ளன. Continue reading “சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள்”
பிரபஞ்சம் என்பது விந்தை என்பதனை சற்றே இரவு வானை நிமிர்ந்து பார்த்து, அந்தச் சிறிய புள்ளிகளைப் பற்றி வியந்த யாரும் மறுக்கமுடியாது. ஒளியலையை விடச் சிறிய அணுத்துகள்கள் தொடங்கி, பல மில்லியன் ஒளியாண்டுகள் வரை பரவியிருக்கும் பல்வேறுபட்ட கட்டமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் பிரபஞ்சம் ஒரு அதி உன்னதமான இயற்கையின் படைப்பு. Continue reading “பிரபஞ்ச கட்டமைப்புகள் – பாகம் 1”
எழுதியது: சிறி சரவணா
நமது சூரியத் தொகுதி என்பது மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. வெறும் சூரியனும் எட்டுக் கோள்களும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட முடியாது. அதையும் தாண்டி விண்கற்கள், வால்வெள்ளிகள் தூசு துணிக்கைகள் என்று பற்பல விண்வெளிப் பொருட்கள் நமது சூரியத் தொகுதியில் உலா வருகின்றன. Continue reading “உலகை அச்சுறுத்தும் விண்கற்கள்”
வியாழனை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலமே ஜூனோ. ஜூலை 5, 2016 இல் இது வெற்றிகரமாக வியாழனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து வியாழனை சுற்றிவரத் தொடங்கிவிட்டது. ஜூனோ விண்கலம் வெற்றிகரமாக வியாழனைச் சுற்றி வரத்தொடங்கியது விஞ்ஞான மற்றும் பொறியியல் துறையின் மகத்தான வெற்றி என்பது மிகையல்ல. மேலும் நாசா இதுவரை அனுப்பிய விண்வெளித் திட்டங்களில் மிகவும் சிக்கலான திட்டங்களில் இதுவும் ஒன்று! ஆகவே ஜூனோவின் நோக்கம் என்ன? அதனைத் தயாரித்தது தொடங்கி, வியாழனில் அது கண்டறிய முனையும் விடயங்கள் என்ன என்பதனைத் தெளிவாக இங்கே பார்க்கப்போகிறோம். Continue reading “ஜூனோ விண்கலம்: ஏன், எதற்கு & எப்படி?”
முன்னைய பாகங்கள்
உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்
அறிவியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு, “பெருவெடிப்புக் கோட்பாடு” (Big Bang theory) ஆகும். இங்கு நாம் “பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட” என்கிற சொற்தொடரை விளங்கிக்கொள்ள வேண்டும். அறிவியல் தனக்குத் தெரியாத விடயத்தை தெரிந்ததாக என்றுமே காட்டிக்கொண்டதில்லை. அப்படிக் கருதினால் அது அறிவியலே இல்லை. Continue reading “உயிரினம் 2 : பிரபஞ்சத்தின் தோற்றம்”
எழுதியது: சிறி சரவணா
இந்தப் பதிவில் கொஞ்சம் வரலாற்றையும் பார்க்கலாம். நமக்கு கொஞ்சம் தூக்கலாகவே பரீட்சியமான வரலாற்றுப் பெயர், மாவீரன் அலக்சாண்டர். நமது உள்ளூர் வரலாற்றில் இடம்பெராவிடினும், இவனது மாவீரமும், துணிச்சலும் அக்காலத்திலேயே ஐரோப்பாவில் இருந்து தற்கால பாகிஸ்தான் வரை தனது ஆட்சியை நிலைநிறுத்திய விதமும் இவனை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய சாதனைகள் எனலாம்.
Continue reading “மாவீரன் அலக்சாண்டர் – தெரிந்ததும் தெரியாததும்”
எழுதியது: சிறி சரவணா
“நீ ஏன் இங்க இருக்கிறே?”
“இது அமைதியா இருக்கே!”
“தனியாவா வந்தே?”
“இல்லை, சுப்புணியும், ஜம்முவும் இருக்காங்க…”
தலையை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த கோவிந்தன், ஒருவரும் இல்லாததை உணர்ந்துகொண்டார். பார்க்க ஒரு 10 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை, அதுவும் இப்படி அதிகாலை வேலையில் தனியா இந்த நதிக்குப் பக்கத்தில் இருகிறதே…
யாரும் இல்லாத இடம் வேறு… சற்றுக் காடான பகுதிதான், அதனால் குழந்தையை தனியாக விட்டுச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை… யாரும் வரும் வரை அவ்விடத்தில் நின்றே தனது உடற்ப்பயிர்சியை செய்துகொண்டிருந்தார்.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி, யாரும் அதிகம் வராத இந்த பார்க்கின் ஒதுக்குப் புறமான, கூலாங்கற்கள் நிரம்பிய நதியின் அருகில் காலைவேளையில் ஓடுவது டாக்டர் கோவிந்தனுக்கு பிடித்தமான விடயம். ஆனால் இன்று யாருமற்ற இடத்தில் ஒரு சிறு பெண்குழந்தை!
“பாப்பா உன் பேரென்ன?”
“மீரா…. மீ….ரா….” என ராகமாகச் சொன்னது அந்தக் குழந்தை. அத்தோடு நிற்காமல், உடற்பயிற்சி செய்கிறேன் என்ற கையையும் காலையும் சும்மா அசைத்துக் கொண்டு நின்ற கோவிந்தனைப் பார்த்து, தன் அருகில் வந்து அமருமாறு சைகை செய்தது, ஆனால் அதன் பார்வை அந்த நதியில் ஓடும் நீரை விட்டு அகலவில்லை.
யார் இந்தப் பெண் குழந்தை? இதன் செய்கைகளைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்ட மாதரியும் இருக்கிறதே, பேசாமல் போலிசுக்கு போன் பண்ணிரலாமா? என்ற என்னத்தை சற்றே ஒதுக்கி வைத்து, கையில் இருந்த துவாயால் தன் கழுத்தை துடைத்துக் கொண்டே அந்தக் குழந்தைக்கு அருகில் நிலத்திலேயே கூலாங்கற்கள் நிரம்பியிருந்த அந்த நதிக்கரை ஓரமாக அமர்ந்தார்.